News April 2, 2024
பொய் பேசுவதில் முதல்வருக்கு நோபல் பரிசு தரலாம்

முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதியும் தோல்வி பயத்தில் உள்ளதாக இபிஎஸ் கூறியுள்ளார். சோளிங்கரில் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர், “3 ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு திமுக செய்தது என்ன?. ரூ.3 லட்சம் கோடி கடன் மட்டுமே அரசு வாங்கியுள்ளது. விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. பொய் பேசுவதற்கு நோபல் பரிசு அறிவித்தால், அது முதல்வர் ஸ்டாலினுக்கு தான் கிடைக்கும்” என்றார்.
Similar News
News August 12, 2025
கஞ்சாவை மத்திய அரசே தடுக்க வேண்டும்: அமைச்சர் ரகுபதி

தமிழகத்தில் கஞ்சாவும் உற்பத்தியாகவில்லை, சாராயமும் காய்ச்சுவதில்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். மேலும், வெளி மாநிலங்களில் இருந்து வரும் அவற்றை மத்திய அரசுதான் தடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மத்திய அரசை சாடினால் வருமானவரித் துறை, அமலாக்கத் துறை சோதனை வந்துவிடுமோ என்ற பயத்தில் தமிழக அரசு மீது ராமதாஸ் குறைகூறி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
News August 12, 2025
உங்களின் தலையெழுத்தை மாற்றும் ஒற்றை சொல்..

தொடர் தோல்விகளால் தவித்து போயிருப்பவர் நீங்கள் என்றால், இந்த ஒரு வார்த்தை உங்களின் தலையெழுத்தையே மாற்றும். எந்த ஒரு சூழலிலும் ‘என்னால் முடியும்’ என்ற எண்ணத்தை மட்டும் மனதில் ஆழமாக நிறுத்துங்கள். அதே போல, சுத்தமான கரும்பலகையில்தான் எதையும் எழுதமுடியும். ஆகவே மனதிலுள்ள குப்பைகளை நீக்குங்கள், அதாவது எதிர்மறை சிந்தனைகளை கைவிட்டு, நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். SHARE IT.
News August 12, 2025
உயிருக்கு போராடும் நடிகருக்கு உதவிய தனுஷ்

துள்ளுவதோ இளமை உள்ளிட்ட படங்களில் நடித்த அபிநய், கல்லீரல் முற்றிலும் பாதிக்கப்பட்டு சீரிஸாக இருக்கிறார். உதவிக்கு கூட ஆள் இல்லாமல், எப்போது வேண்டுமானாலும் உயிர்போகும் என்ற பரிதாப நிலையில் இருக்கும் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், அபிநய்யின் மருத்துவச் செலவுக்கு ₹5 லட்சம் கொடுத்துள்ள நடிகர் தனுஷ், ‘நண்பா மீண்டும் வந்துவிடுவாய்’ என ஆறுதல் கூறியிருக்கிறார்.