News September 23, 2025

பிராமணர் என்பதால் இட ஒதுக்கீடு இல்லை: நிதின் கட்கரி

image

கடவுள் எனக்கு செய்த மிகப்பெரிய உதவி என்னவென்றால், நான் ஒரு பிராமணன், இதனால் எனக்கு இடஒதுக்கீடு கிடைக்கவில்லை என்று காமெடியாக பலரிடம் கூறுவேன் என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நாக்பூரில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், எந்த மனிதரும் சாதி, மதம், மொழியால் உயர்ந்தவர் அல்ல, மாறாக அவர்களின் குணத்தாலேயே உயர்ந்தவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். பிராமணர் குறித்த நிதினின் கருத்து பேசுபொருளாகியுள்ளது.

Similar News

News September 23, 2025

திமுகவின் சமூகநீதி துரோகம் தொடர்கிறது: அன்புமணி

image

கர்நாடகத்தில் 2-வது முறையாக நடைபெறும் சாதிவாரி கணக்கெடுப்பை குறிப்பிட்டு, தமிழ்நாட்டில் மட்டும் சமூகநீதிக்கு எதிரான திமுகவின் துரோகம் தொடர்வதாக அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். DMK அரசின் துரோகத்தை மக்கள் இனியும் மன்னிக்க தயாராக இல்லை எனவும் தெரிவித்துள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சட்டம் தடையில்லை என கூறிய அவர் ஆட்சியாளர்களின் சமூக அநீதி மனநிலை மட்டுமே தடையாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News September 23, 2025

இந்தியா – மொராக்கோ இடையே புதிய ஒப்பந்தங்கள்

image

2 நாள் அரசு முறை பயணமாக, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மொராக்கோவிற்கு சென்றுள்ளார். அங்கு, பயங்கரவாத எதிர்ப்பு, கடற்சார் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு, ராணுவ மருத்துவம், பயிற்சி மற்றும் தொழில்துறை கூட்டாண்மை ஆகிய துறைகளில், இரு நாட்டு ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த நிகழ்வில், ராஜ்நாத் சிங் மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சரும் கையெழுத்திட்டனர்.

News September 23, 2025

கல்வி நிதி: மத்திய அரசுக்கு அன்பில் மகேஸ் வேண்டுகோள்

image

மாணவர்கள் நலன் சார்ந்த கல்வி நிதியில் அரசியல் செய்யாதீர்கள் என மத்திய அரசை அன்பில் மகேஸ் கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக கல்வி நிதியை தராமல் மத்திய அரசு முரண்டு பிடிப்பதாக அவர் சாடியுள்ளார். இந்தி, சமஸ்கிருதத்தை தமிழக அரசு ஏற்காது என குறிப்பிட்ட அவர், மத்திய பாஜக அரசு வலுக்கட்டாயமாக மும்மொழிக் கொள்கையை ஏற்கச் சொல்வது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!