News March 29, 2024

எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை

image

மத்திய, மாநில அரசுகள் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். கோவையில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து திறந்த வேனில் பரப்புரை மேற்கொண்ட அவர், ‘பிரதமர் மோடியின் ஆட்சியில் ஜி.எஸ்.டி கொண்டு வந்த பின் கோவையில் மில்கள் மூடப்பட்டுள்ளன. 300% மின் கட்டண உயர்வால், தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன’ என்றார்.

Similar News

News November 24, 2025

தமிழ்நாட்டில் வாக்களிக்க வெளிமாநிலத்தவர் விருப்பம்

image

விநியோகம் செய்யப்பட்ட SIR படிவங்களில், 50%-ஐ பூர்த்தி செய்து பெற்றிருப்பதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வசிக்கும் வெளிமாநிலத்தவர் 869 பேர் இங்கு வாக்களிக்க விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், வெளிமாநிலத்தில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் படிவம் 8-ஐ நிரப்பி தமிழகத்தின் வாக்காளர்களாக இணையலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

News November 24, 2025

1.3 கோடி ஆண்டு பழமையான ஆமைக்கு ஷகீரா பெயர்!

image

புதிய இனம் கண்டறியப்பட்டால் பொதுவாக அறிவியல் முறைப்படி பெயர் வைக்கப்படும். ஆனால், கொலம்பியாவில் உள்ள தடாகோவா பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 1.3 கோடி ஆண்டுகள் பழமையான ஆமை படிமத்துக்கு, கொலம்பிய ராப் பாடகி ஷகீராவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஷகீராவுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், ஆராய்ச்சியாளர் எட்வின் கேடனாவின் வாக்குறுதியின் பேரிலும் ‘Shakiremys colombiana’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

News November 24, 2025

பட்டியலின மக்களுக்கும் திமுக செய்யும் துரோகம்: அன்புமணி

image

SC ஆணையிட்டு ஓராண்டாகியும் பட்டியலின சமூகத்துக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க மறுப்பது ஏன் என அன்புமணி கேட்டுள்ளார். இதேபோல வன்னியர்களுக்கும் உள் இடஒதுக்கீடு வழங்கவில்லை என்ற அவர், வன்னியர்களாக இருந்தாலும், பட்டியலினத்தவர்களாக இருந்தாலும் சமூகநீதி வழங்கக்கூடாது என்பதே திமுகவின் கொள்கை எனவும் விமர்சித்துள்ளார். இதனால், அநீதி இழைக்கும் திமுகவுக்கு தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!