News February 25, 2025
மீட்புப் பணியில் முன்னேற்றம் இல்லை: அதிகாரிகள் தகவல்

தெலங்கானாவில் சுரங்கத்தில் சிக்கிய 8 பேரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய்க்காக சுரங்கம் தோண்டப்பட்டதில் மேற்பகுதி இடிந்து விழுந்து, பொறியாளர்கள் உள்பட 8 பேர் இடிபாடுகளில் சிக்கினர். 4வது நாளாக நடக்கும் மீட்புப் பணியில் முன்னேற்றம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் அதிநவீன ரோபோடிக் கேமராக்கள் மூலம் தேடும் பணி தொடர்கிறது.
Similar News
News February 25, 2025
தமிழக அரசில் 425 இடங்கள்.. ₹1,30,400 வரை சம்பளம்!

தமிழக அரசின் ஹாஸ்பிடல்களில் Pharmacist பணிக்கு 425 காலிப்பணியிடங்கள் உள்ளன. பார்மசி படிப்பை முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு, தமிழ் மொழிக்கான தகுதித் தேர்வு, கணினி வழித் தேர்வு ஆகியவை நடைபெறும். சம்பளம் தகுதிக்கேற்ப ₹35,400 – ₹1,30,400 வரை வழங்கப்படும். தகுதியானவர்கள் மார்ச் 10க்குள் விண்ணப்பிக்கலாம். முழு விவரங்களுக்கு <
News February 25, 2025
மார்ச் 5 கூட்டத்தில் விவாதிக்கப் போவது என்ன?

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக மார்ச் 5ல் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு CM <<15574610>>ஸ்டாலின்<<>> அழைப்பு விடுத்துள்ள நிலையில், அதில் பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. குறிப்பாக மும்மொழிக் கொள்கை, நீட் விவகாரம், தமிழகத்திற்கு மத்திய அரசு நிலுவை வைத்துள்ள நிதி பிரச்னை குறித்தும் விவாதிக்கப்படும் என CM ஸ்டாலின் தெளிவாகக் கூறியுள்ளார்.
News February 25, 2025
ரூ.100க்காக நண்பனை கொன்ற இளைஞர்.. மடக்கியது போலீஸ்

டெல்லியில் 100 ரூபாய்க்காக நண்பனை கொன்ற இளைஞரை போலீஸ் கைது செய்துள்ளது. நரேலா பகுதியைச் சேர்ந்த அமன் (22), நண்பன் பண்டிக்கு ரூ.100 கடன் கொடுத்ததாகவும், அதை அவர் திரும்பி கேட்டபோது, பண்டி திரும்பி தராமல் அலைக்கழித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அமன், பண்டி தலையில் செங்கல்லால் அடித்து கொலை செய்தான். சடலத்தை ரைஸ்மில் அருகே வீசிவிட்டு சென்றநிலையில், பாேலீஸ் மடக்கிப் பிடித்துள்ளது.