News May 14, 2024
குற்ற வழக்கு இருந்தால் நோ பாஸ்போர்ட்

குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தால், குற்றம் சாட்டப்பட்டவர் பாஸ்போர்ட் பெற முடியாது என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வன்கொடுமை தடைச்சட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தமிழரசன் பாஸ்போர்ட் கோரி வழக்குத் தொடுத்தார். இவ்வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாஸ்போர்ட் பெற்று வெளிநாடு செல்ல அனுமதித்தால், அது குற்ற வழக்கின் விசாரணையை பாதிக்கும் என்பதால் பாஸ்போர்ட் பெற அனுமதி தர முடியாது என தெரிவித்துள்ளது.
Similar News
News March 15, 2026
காஞ்சி: போனில் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2) அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3) ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4) குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5.முதியோருக்கான அவசர உதவி -1253, 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. 8. இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News March 15, 2026
தேர்தல் நேரத்தில் விஜய்க்கு சிக்கல்

ஏப்.23-ல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், விஜய்க்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தவெகவின் ஒற்றை முகமாக திகழும் அவர், இறுதிக்கட்ட பரப்புரையை தவறவிடும் சூழல் எழுந்துள்ளது. சங்கீதா தொடர்ந்த விவாகரத்து வழக்கில் ஏப்.20-ல் ஆஜராக செங்கல்பட்டு கோர்ட் விஜய்க்கு உத்தரவிட்டுள்ளது. இது தவெகவின் கடைசிக்கட்ட தேர்தல் பணிகளில் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. விஜய்க்கு விலக்கு கிடைக்குமா?
News March 15, 2026
தேர்தல் விதிமீறல்.. cVIGIL செயலியில் புகார் கொடுங்க!

சிவிஜில் (cVIGIL) என்பது தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து புகாரளிப்பதற்கு ECI உருவாக்கிய செயலி ஆகும். இதில் அரசியல் கட்சிகள் பணப்பட்டுவாடா செய்வது, பரிசுப் பொருள்கள் வழங்குவது, அனுமதித்த நேரத்தை மீறி பிரசாரம் மேற்கொள்வது உள்ளிட்டவை குறித்து பொதுமக்கள் புகாரளிக்கலாம். எந்தவொரு விதிமீறலாக இருந்தாலும், அதுபற்றிய போட்டோ, வீடியோ, ஆடியோவை ஆதாரமாக பதிவேற்றி புகார் தெரிவிக்கலாம்.


