News August 19, 2025
மனிதக்கழிவை யாரும் அகற்றக்கூடாது: வன்னியரசு

தூய்மை பணியாளர்களை பணிநிரந்தரம் செய்யக்கூடாது என அண்மையில் திருமா பேசியது சர்ச்சையான நிலையில், இதற்கு விளக்கமளித்த வன்னியரசு, தூய்மைப் பணிக்கு குறிப்பிட்ட சமூகத்தினரே பணியமர்த்தப்படுகிறார்கள். ஆகையால் இதை யோசித்து, சமூகநீதிப்பார்வையில் திருமாவளவன் கருத்து தெரிவித்ததாக கூறினார். எதிர்காலத்தில் எந்த சமூகத்தினரும் மனிதக்கழிவை அகற்றும் பணியை செய்யக்கூடாது என்பதே விசிகவின் தொலைநோக்கு பார்வை என்றார்.
Similar News
News March 12, 2026
FLASH: சர்வதேச சந்தையில் தங்கம் விலை பெரிய சரிவு!

சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் பெரிய அளவில் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் $80(இந்திய மதிப்பில் ₹7,375) குறைந்து $5,150 ஆக உள்ளது. அதேபோல், வெள்ளி விலை 1 அவுன்ஸ் $4 குறைந்து $85 ஆக நீடிக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் இந்திய சந்தையில் இன்று தங்கம் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.
News March 12, 2026
தமிழ்நாட்டை ATM-ஆக நினைக்கும் திமுக: PM மோடி

தமிழ்நாட்டின் வளங்களை ஒரு குடும்பம் கொள்ளை அடித்துக் கொண்டிருப்பதாக திமுகவை PM மோடி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற NDA பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திமுகவை மக்கள் ஆட்சிக்கு கொண்டு வந்தார்கள், ஆனால் அவர்கள் தமிழ்நாட்டை ATM போல் நினைத்து சுரண்டுவதாக கூறினார். அமைச்சர்கள் மாறலாம், MLA-க்கள் மாறலாம் ஆனால், அதிகாரம் மட்டும் ஒரு குடும்பத்திடம் சிக்கித் தவிப்பதாக சாடினார்.
News March 12, 2026
திமுக மீது வேல்முருகன் அப்செட்டில் இருக்கிறாரா?

திமுக கூட்டணியில் இருப்பவர்கள் 2 இலக்கத்தில் தொகுதிகளை கேட்க, தன்பங்கிற்கு 10 தொகுதிகளை கேட்டு அறிவாலயத்திடம் வேல்முருகன் லிஸ்ட் கொடுத்திருக்கிறாராம். ஆனால், விரும்பும் தொகுதிகளை கேட்டால் 1 தொகுதி, தாங்கள் கொடுக்கும் தொகுதிகளை ஏற்றுக்கொள்வதாக இருந்தால் 2 தொகுதிகள் கிடைக்கும் என திமுக தலைமை ரிப்ளை கொடுத்திருக்கிறது என்கின்றனர். இதனால், வேல்முருகன் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.


