News December 29, 2024
விஜய் போல தெளிவு யாருக்கும் கிடையாது: கிச்சா சுதீப்

கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் கிச்சா சுதீப், தற்போது ஆக்சன் திரில்லர் படமாக உருவாகியுள்ள ‘மேக்ஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார். சென்னையில் நடந்த இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், “விஜய் சார் பெரிய கனவு காண்பவர். அவரைப் போல தெளிவு யாருக்கும் கிடையாது. என்ன, எப்போது செய்ய வேண்டும் என்று அவருக்கு நன்றாக தெரியும். அதை அவர் மிக துல்லியமாக செய்வார்” என்று பாராட்டினார்.
Similar News
News March 9, 2026
இந்திய வீரர்களின் வெற்றிக் கொண்டாட்டம்!

மூன்றாவது முறையாக இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்தியா கோப்பையை வென்றதும் அதன் கொண்டாட்டம்<<19333207>> நாடு முழுவதும் எதிரொலித்தது.<<>> குறிப்பாக முக்கிய பங்கு வகித்த இந்திய அணி வீரர்கள் அகமதாபாத் மைதானத்திலேயே தங்களின் வெற்றியை உற்சாகமாக கோப்பையுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த மகிழ்ச்சியான தருணங்களை காண வலதுபக்கம் Swipe செய்து பாருங்கள்!
News March 9, 2026
விஜய்க்கு என்ன செய்வதென்று தெரியவில்லை: வைகோ

திமுக வெற்றி முகத்தில் நின்றுகொண்டிருப்பதால் என்ன செய்வதென்று விஜய்க்கு தெரியவில்லை என வைகோ விமர்சித்துள்ளார். அதனால்தான் திமுக வெளியிட்ட அறிவிப்புகளையே விஜய்யும் வெளியிட்டிருக்கிறார் என்ற அவர், அந்த உரிமை அவரது கட்சிக்கு இருக்கிறது என்றார். மேலும், மற்ற கட்சியின் தேர்தல் அறிக்கையில் இல்லாத ஓரிரண்டு அறிவிப்புகளும் மதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
News March 9, 2026
இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

புதுக்கோட்டை, திருவாப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இன்று(9.03.2026) அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். இதனால், அம்மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் இன்றைய தினம் இயங்காது. அதேநேரம், அரசு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வரும் 14-ம் தேதி சனிக்கிழமை வேலைநாள் என கலெக்டர் அருணா அறிவித்துள்ளார்.


