News June 14, 2024
சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை: ரம்யா

அரசியல் அழுத்தங்களுக்கு கர்நாடக காவல்துறை அடிபணியாது என்று ‘குத்து’ பட நடிகை ரம்யா தெரிவித்துள்ளார். கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் & நடிகை பவித்ரா கவுடா கைது செய்யப்பட்டது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில், “இங்கே சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என யாருமில்லை. சட்டத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்து வருகிறது. ரேணுகா சுவாமிக்கு நீதி கிடைக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News March 4, 2026
போரால் சிக்கித் தவிக்கும் ரொனால்டோ

கால்பந்து வீரர் ரொனால்டோ, போர் பதற்றம் காரணமாக சவுதியில் இருந்து குடும்பத்துடன் பிரைவேட் ஜெட்டில் வெளியேறியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அது உண்மையில்லை என அல்-நாசர் எஃப்சி தெரிவித்துள்ளது. கடைசியாக நடந்த போட்டியில் ரொனால்டோவுக்கு தொடையில் காயம் ஏற்பட்டதையடுத்து, அவர் தற்போது சிகிச்சையில் உள்ளார். எனவே இந்த நேரத்தில் அவரால் வேறு இடத்திற்கு செல்லமுடியாது என கால்பந்து க்ளப் விளக்கமளித்துள்ளது.
News March 4, 2026
பங்குச்சந்தை சரிந்தது.. மிகப்பெரிய தாக்கம்

இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம் காரணமாக இந்திய பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,723 புள்ளிகள் சரிந்து 78,521 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது. அதேபோல, தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 476 புள்ளிகள் சரிந்து 24,600 புள்ளிகளில் தொடங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
News March 4, 2026
விஜய்யின் மேடை பேச்சு வெறும் பெர்ஃபாமன்ஸ்: ரவிக்குமார் MP

விஜய்க்கு அரசியல் களத்திற்கும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும் வித்தியாசம் தெரியவில்லை என ரவிக்குமார் MP விமர்சித்துள்ளார். மேலும், மேடையில் அவர் பேசுவதெல்லாம் வெறும் பெர்ஃபாமன்ஸ் என்றும், ஆனால் பல இளைஞர்கள் மற்றும் பெண்கள் அவரை பின் தொடர்வது வேதனையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். வரும் தேர்தலில் தவெக படுதோல்வியை சந்தித்த பின், விஜய்யின் மாயை விலகிவிடும் எனவும் கூறியுள்ளார்.


