News June 1, 2024

கலைஞர் இருக்கும் வரை எவரும் வாலாட்ட முடியவில்லை

image

கலைஞர் இருந்திருந்தால் நான் பேச வேண்டிய அவசியமே இல்லை என நடிகர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். ராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்த அவர், கலைஞர் இருக்கும் வரை எவரும் வாலாட்ட முடியவில்லை என்றும், அவர் கொள்கையை வைத்து அரசியல் செய்தவர் என்றும் கூறினார். மேலும், கலைஞர் இருந்தார் என்ற செய்தியைவிட அவர் ஏன் கலைஞர் ஆனார் என்ற செய்திதான் முக்கியம் எனக் குறிப்பிட்டார்.

Similar News

News September 19, 2025

MP-க்கள் நிதியை ₹10 கோடியாக உயர்த்துக: CM ஸ்டாலின்

image

சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த ஆய்வுக்கூடத்தில் அரசு செயல்படுத்திய திட்டங்கள் குறித்து CM ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு இதுவரை ₹13,000 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது எனவும், விவசாயிகளுக்கு நிதியுதவிகளை சேர்ப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்றும் தெரிவித்தார். மேலும், எம்.பி தொகுதி நிதியை ₹10 கோடியாக உயர்த்தவும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

News September 19, 2025

முற்றிலும் டிஜிட்டலுக்கு மாறும் நிலப்பதிவு முறை

image

கிராம, நகர்புற பகுதிகளில் நிலங்களுக்கான உரிமைகளை தெளிவாக வரையறுக்கும் வகையில் புதிய மின்னணு தரவு தளத்தை மத்திய அரசு பயன்பாட்டுக்கு கொண்டுவர உள்ளது. குறிப்பிட்ட நிலம் தொடர்பான A – Z தகவல்களை தெரிந்துகொள்ளும் வகையில் இந்த தளம் அமைக்கப்படுகிறதாம். இதனால் நிலம் தொடர்பான பல சட்ட சிக்கல்களுக்கு ஒரு முடிவு கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. 99.8% பதிவுகள் ஏற்கனவே டிஜிட்டல் மயமாக்கப்பட்டுவிட்டதாம்.

News September 19, 2025

RoboShankar வீட்டில் நடக்க இருந்த விசேஷம்; கடைசி நேரத்தில்..

image

மகள் இந்திரஜாவின் மகனும், தன்னுடைய பேரனுமான நட்சத்திரனுக்கு நாளை மறுதினம் காதுகுத்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார் ரோபோ ஷங்கர். ஆனால், அது நடக்கும் முன்பே திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவர் உயிரிழந்த சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில், பேரனின் காதுகுத்து நிகழ்வை பார்க்கும் கொடுப்பினை கூட அவருக்கு இல்லாமல் போய்விட்டதே என குடும்பத்தார் வருந்துகின்றனர்.

error: Content is protected !!