News October 24, 2024

யாராலும் இந்தியாவை புறக்கணிக்க முடியாது: நிர்மலா

image

உலக வங்கி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். அவர் பேசுகையில், “இன்று உலக அளவில் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்திருக்கிறது. ஆனால், இதை பயன்படுத்தி யார் மீதும் இந்தியா ஆதிக்கம் செலுத்தாது. மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும், பொருளாதார சக்தியாகவும் இந்தியா இருக்கிறது. எனவே, அமெரிக்காவோ, சீனாவோ யாராலும் இந்தியாவை புறக்கணிக்க முடியாது” என பெருமிதத்துடன் பேசினார்.

Similar News

News November 22, 2025

டெஸ்ட் தொடரை சமன் செய்யுமா இந்தியா?

image

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று, கவுகாத்தியில் தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடத்த முதல் டெஸ்டில் தோல்வியை சந்தித்ததால், தொடரை சமன் செய்ய இந்த போட்டியில் இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. காயம் காரணமாக சுப்மன் கில் விலகியதால், அவருக்கு பதில் ரிஷப் பண்ட் கேப்டனாக செயல்பட உள்ளார். அதேபோல் கில் இடத்தில் சாய் சுதர்சனம் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

News November 22, 2025

மேகதாது அணை கட்டினால் டெல்டா பாலைவனமாகும்: EPS

image

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக உள்ளதாக EPS குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகாவில் மேகதாது அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்றும், அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இந்தியா கூட்டணியில் உள்ள CM ஸ்டாலின், ராகுல், சோனியா காந்தியிடம் பேசி சுமுகமான முடிவை எடுக்கவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

News November 22, 2025

வணிகம் 360°: US நிறுவனத்துடன் கைகோர்க்கும் TCS

image

*பிரபல உணவுப்பொருள் நிறுவனமான வில்மருடனான பங்குகளை அதானி குழுமம் முழுமையாக விற்றது. *நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான TCS, இந்தியா முழுவதும் AI தரவு சேமிப்பகங்களை அமைக்கும் திட்டத்தை அமெரிக்காவின், டிபிஜி நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
*நாட்டில் போதிய அளவில் அன்னிய செலாவணி கையிருப்பில் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

error: Content is protected !!