News April 2, 2024
வரலாற்று உண்மைகளை யாராலும் மாற்ற முடியாது

அருணாச்சல் இந்தியாவின் ஒரு பகுதி என்பதை யாரும் மறுக்க முடியாது என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். இந்தியாவின் 30 நிலப்பரப்புக்கு சட்டவிரோதமாக சீனா பெயரிட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. சீனா வரலாற்று உண்மைகளை மாற்ற முடியாது. இந்தியாவின் அங்கமாக அந்த மாநிலமும், மக்களும் இருக்கிறார்கள். பொய்களை கட்டவிழ்த்து விடுவதை சீனா தொடர்ந்து செய்து வருகிறது என X-இல் அவர் கூறியுள்ளார்.
Similar News
News January 27, 2026
BUDGET: இந்த பொருள்களின் விலை குறைகிறது

மத்திய பட்ஜெட் வரும் 1-ம் தேதி தாக்கலாக உள்ள நிலையில், நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த பட்ஜெட்டில் மின்சார வாகனங்கள், செல்போன், லேப்டாப் உள்ளிட்ட மின்னணு பொருள்களை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் சாதனங்களுக்கான இறக்குமதி வரி மற்றும் மானியம் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இந்த பொருள்களின் விலை ஏப்ரல் மாதத்தில் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.
News January 27, 2026
வேலைக்காக படுக்கைக்கு அழைப்பு: சின்மயி பகீர் புகார்

திரைத்துறையில் வாய்ப்புக்காக பெண்களிடம் ‘பாலியல் உறவை’ எதிர்பார்க்கும் சூழல் இல்லை என்று சிரஞ்சீவி தெரிவித்திருந்தார். இதை மறுத்துள்ள சின்மயி, இத்துறை கண்ணாடி அல்ல, சம்மதிக்க மறுத்தால் வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக பதிவிட்டுள்ளார். மேலும், சிரஞ்சீவியின் காலத்தில் பெண் கலைஞர்கள் மதிக்கப்பட்டார்கள், ஆனால் தற்போது கமிட்மென்ட் என்ற பெயரில் வேலைக்கு பாலியல் உறவை எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
News January 27, 2026
வாட்ஸ்ஆப் பாதுகாப்பானது அல்ல: எலான் மஸ்க்

உங்கள் வாட்ஸ்ஆப் மெசேஜை ரகசியமாக யாராவது படித்தால் எப்படி இருக்கும்? ஆனால், அது உண்மை தான் என்கிறார் எலான் மஸ்க். வாஸ்ட்ஆப் உரையாடல்களை மெட்டா நிறுவனம் படிப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த மெட்டா, என்கிரிப்ஷன் செய்யப்படுவதால் மெசேஜ்கள் பாதுகாப்பானவை என வாதிட்டது. இதுபற்றி கமெண்ட் செய்த மஸ்க், வாட்ஸ்ஆப் பாதுகாப்பற்றது என்று கூறியுள்ளது, அதன் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


