News April 29, 2025
அண்ணாமலைக்கு ‘நோ’ எம்.பி. பதவி.. காரணம் இதுதான்!

TN பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலைக்கு அதிகாரமிக்க பொறுப்பு வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். <<16247938>>ஆந்திராவில் <<>>இருந்து ராஜ்ய சபா எம்.பி. ஆக்கப்பட்டு பின்னர் மத்திய அமைச்சரவையில் அவருக்கு பொறுப்பு வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. அதற்கு காரணம் அண்ணாமலை தானாம். அவர் TN அரசியலில் தீவிரம் காட்ட விருப்பம் தெரிவித்து இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News September 3, 2025
BREAKING: தங்கம் விலை Record படைத்தது

ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாறு காணாத அளவிற்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹640 உயர்ந்து ₹78,440-க்கும், கிராமுக்கு ₹80 உயர்ந்து ₹9,805-க்கும் விற்பனையாகிறது. அதேநேரம், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஒருகிராம் வெள்ளி விலை ₹137-க்கும், கிலோ வெள்ளி ₹1,37,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
News September 3, 2025
ஓணம் பண்டிகை: சபரிமலை நடை இன்று மாலை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு ஓணம் பண்டிகை வருகிற 5-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை நடை திறக்கப்படுகிறது. மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். 5-ம் தேதி திருவோண சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். தொடர்ந்து 7-ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.
News September 3, 2025
TNPSC வினாத்தாளில் தவறு: நயினார் ஆவேசம்

ஐயா வைகுண்டரை பற்றி TNPSC வினாத்தாளில், ‘God of hair cutting’ என்று இழிவாகக் குறிப்பிடப்பட்டதற்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐயா வைகுண்டரை ‘முடிசூடும் பெருமாள்’ என மக்கள் அழைக்கும் நிலையில், மொழிப்பெயர்ப்பில் அவரது பெயர் இழிவுபடுத்தப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். தன் தந்தை குறித்து இதேபோல் தவறாக குறிப்பிட்டால் CM பேசாமல் இருப்பாரா எனவும் கேள்வி எழுப்பினார்.