News October 8, 2025
விஜய் மீது வன்மம் இல்லை: திருமாவளவன்

விஜய் மீது எந்த வன்மமும் இல்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். கரூர் துயரத்தில் விஜய்யை சிறைப்படுத்த வேண்டும் என விசிக வலியுறுத்தவில்லை என்றும் ஆனால், அவர் தார்மீக பொறுப்பு ஏற்காததால் தான் விமர்சனங்கள் வைக்கப்படுவதாகவும் திருமாவளவன் கூறியுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் நடக்க கூடாது என்கிற படிப்பினையை விஜய் உள்பட எல்லா அரசியல் கட்சி தலைவர்களும் பெற வேண்டும் என்றும் அவர் பேசியுள்ளார்.
Similar News
News October 8, 2025
அக்டோபர் 8: வரலாற்றில் இன்று

*1922 – அறிவியலாளர் கோ. நா. இராமச்சந்திரன் பிறந்தநாள். *1932 – இந்திய விமானப்படை நிறுவப்பட்டது. *1935 – தடகள வீரர் மில்கா சிங் பிறந்தநாள். *1944 – நடிகை ராஜ்ஸ்ரீ பிறந்தநாள். *1987 – விடுதலைப் புலிகள் தாக்குதலில் இந்திய அமைதிப்படையின் 8 வீரர்கள் உயிரிழந்தனர். *2005 – 7.6 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தால் பாக்., இந்தியா, ஆப்கானில்., சுமார் 86,000 பேர் உயிரிழப்பு. *2020 – ராம் விலாஸ் பஸ்வான் மறைந்த நாள்.
News October 8, 2025
இந்த டயட் 40,000 உயிரிழப்புகளை தடுத்திடும்

தாவரங்கள் நிறைந்த Planetary ஹெல்த் டயட்டினால் தினமும் 40,000 உயிரிழப்புகளை தடுக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பழங்கள், காய்கறிகள், பருப்புகள், நட்ஸ், சிறிதளவு இறைச்சி அடங்கிய இந்த டயட் பின்பற்றினால் சராசரி வாழ்நாளுக்கு முன்பாகவே நிகழும் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என EAT- லான்செட் கமிஷனின் ஆய்வு கூறுகிறது. இந்த டயட்டினால் மாரடைப்பு, இதய நோய், கேன்சர் உள்ளிட்ட நோய்களின் அபாயமும் குறையுமாம்.
News October 8, 2025
₹1000 கோடி வசூலிக்குமா ‘காந்தாரா: சாப்டர் 1’

இதுவரை ₹400 கோடி வசூலை கடந்துள்ள ‘காந்தாரா: சாப்டர் 1’ ₹1000 கோடி வசூலிக்குமா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள இப்படம், தீபாவளி வாரத்தை கடந்தும் வெற்றிகரமாக ஓட அதிக வாய்ப்புள்ளது. எனினும், இந்தி பெல்டில் இப்படம் ஈட்டும் வசூலை பொறுத்தே ₹1,000 கோடி சாத்தியமாகும் என்றும் அதிகபட்சமாக ₹700-₹800 கோடி வசூல் உறுதி எனவும் திரையுலகை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.