News August 18, 2024
சீனாவிற்கு அழைப்பு இல்லை

இந்தியா நடத்திய உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டில் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. நேற்று நடைபெற்ற மாநாட்டில் உலகம் முழுவதும் மொத்தம் 123 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பருவநிலை மாற்றம், நவீன தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து காணொளி வாயிலாக நடைபெற்ற மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. இது 3ஆவது உச்சி மாநாடாகும்.
Similar News
News January 17, 2026
இந்தியாவில் மோசமான சூழல்: டென்மார்க் வீராங்கனை

காற்று மாசுபாடு, மோசமான ஏற்பாடு ஆகிய காரணங்களால் டெல்லியில் நடக்கும் <<18857250>>இந்திய பேட்மிண்டன் ஓபனை<<>> சர்வதேச வீரர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், டென்மார்க் வீராங்கனை மியா பிலிச்ஃபெல்ட், இந்தியாவில் எதிர்பார்த்ததை விட மிக மோசமான சூழலை எதிர்கொள்ள நேர்ந்ததாக அதிருப்தி தெரிவித்துள்ளார். ஒரு சர்வதேச போட்டிக்கு இதுபோன்ற மோசமான ஏற்பாடுகளை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்றும் கூறியுள்ளார்.
News January 17, 2026
முகமது அலி பொன்மொழிகள்

*அடித்து வீழ்த்தப்பட்டால் நீங்கள் தோற்கமாட்டீர்கள். கீழேயே இருந்தால் நீங்கள் தோற்றுவிடுவீர்கள். *நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள். *ஆபத்துக்களை எதிர்கொள்ளத் தைரியம் இல்லாதவர்கள், வாழ்க்கையில் எதையும் சாதிக்க மாட்டார்கள். *நான் தான் வெல்லப் போகிறேன் என்ற மன உறுதியுடன் ஒருவன் இருக்கும் போது, அவனை வெல்வது கடினம். *என் வலுவான எதிராளி எப்பொழுதும் நான்தான்.
News January 17, 2026
தொடரும் வேட்டை.. 7,800 சூதாட்ட தளங்கள் முடக்கம்

நேற்று ஒரேநாளில் 242 சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட இணையதளங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. கடந்த அக்டோபரில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா அமலான நிலையில், இதுவரை 7,800 சூதாட்ட தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத சூதாட்டத்தில் அடிமையாகி மக்கள் பணத்தை இழப்பதை தவிர்க்க, சூதாட்ட தளங்களை முடக்கும் பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


