News August 18, 2024

சீனாவிற்கு அழைப்பு இல்லை

image

இந்தியா நடத்திய உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டில் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. நேற்று நடைபெற்ற மாநாட்டில் உலகம் முழுவதும் மொத்தம் 123 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பருவநிலை மாற்றம், நவீன தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து காணொளி வாயிலாக நடைபெற்ற மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. இது 3ஆவது உச்சி மாநாடாகும்.

Similar News

News January 28, 2026

செங்கை: 85 பேர் அதிரடி கைது!

image

மறைமலைநகரில் மூடப்பட்ட பிளாஸ்டிக் கோணிப்பை நிறுவன ஊழியர்கள், தங்களுக்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகையைக் கோரி போராடி வந்தனர். இந்நிலையில், தொழிற்சாலை எந்திரங்களை நிர்வாகம் லாரிகளில் ஏற்றிச் செல்வதைக் கண்டு ஆத்திரமடைந்த 85 தொழிலாளர்கள் லாரியைச் சிறைபிடித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் போராட்டக்காரர்களைக் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.பின்னர் மதியம் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

News January 28, 2026

மனசாட்சியை அடமானம் வைத்த செங்கோட்டையன்: ADMK

image

நடிகர் கட்சியில் அடைக்கலமாகியுள்ள EX அமைச்சர்கள் செங்கோட்டையன், கிருஷ்ணன் ஆகியோர் மனசாட்சியை எங்கே அடமானம் வைத்துவிட்டார்கள் என RB உதயக்குமார் கேள்வி எழுப்பினார். MGR, ஜெயலலிதாவின் சேவைகளில் பங்கெடுத்தவர்களை பக்கத்தில் வைத்துக் கொண்டு, அதிமுகவிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கருத்து சொல்வதை, அவர்கள் மனசாட்சி ஏற்றுக்கொள்கிறதா எனவும் கேட்டுள்ளார். ADMK-ஐ விஜய் ஊழல் கட்சி என விமர்சித்திருந்தார்.

News January 28, 2026

வங்கிக் கணக்கில் ₹2,000.. அரசு புதிய அறிவிப்பு

image

பிப்.1-ல் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், PM KISAN திட்டத்தின் அடுத்த தவணை வரவு வைக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், வழக்கம்போல் இத்திட்டத்தின் கீழ் 22-வது தவணையாக ₹2,000 பிப்ரவரியில் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. வேளாண் துறை அதிகாரிகளை அணுகி அடையாள எண்ணை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. e-KYC அப்டேட்டையும் விவசாயிகள் நிறைவு செய்வது அவசியமாகும்.

error: Content is protected !!