News September 14, 2024
ராமர் இல்லாமல் இந்தியா இல்லை: ஆளுநர்

சென்னை ராஜ்பவனில் ‘ஸ்ரீராமா இன் தமிழகம்’ என்ற புத்தகத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டு பேசினார். அப்போது ராமரை நீக்கிவிட்டு பார்த்தால் இந்தியா என்ற நாடே இல்லை என கூறினார். மக்கள் மனங்களில் இருந்து ராமரை ஒருபோதும் நீக்க முடியாது என அவர் தெரிவித்தார். மேலும் தர்மம் இல்லாமல் பாரதம் இல்லை என்றும், சனாதன தர்மம் ஒற்றுமை குறித்து பேசுவதாகவும் தெரிவித்தார்.
Similar News
News October 23, 2025
G Pay-வுக்கு போட்டியாக களமிறங்கும் Zoho pay

கூகுள் பே, Phonepe-வுக்கு போட்டியாக Zoho Pay என்ற செயலியை Zoho நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. இதன்மூலம், பணத்தை பல மடங்கு பாதுகாப்போடு அனுப்பவும், பெறவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஏற்கனவே Zoho-வின் அரட்டை செயலியை வைத்திருந்தால், அதன் மூலமாகவும் பணம் அனுப்பும் வசதியை கொண்டுவர உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் கடன்கள், காப்பீடுகள் கூட வழங்கப்பட இருக்கிறதாம்.
News October 23, 2025
DMK ஆட்சியில் அனைவருக்கும் கண்ணீர் பரிசு: RB உதயகுமார்

சிறுவர்கள் பட்டங்களை பறக்கவிடுவது போல CM ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டதாக RB உதயகுமார் சாடியுள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அவர், தற்போதைய ஆட்சியில், அரசு ஊழியர்கள் முதல் விவசாயிகள் வரை அனைவருக்கும் கண்ணீர் மட்டுமே பரிசாக கிடைத்துள்ளதாகவும் விமர்சித்துள்ளார். புதிய DGP முதல் மதுரை மேயர் வரை யாரையும் தேர்வு செய்ய முடியாமல் தவிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
News October 23, 2025
BREAKING: உருவாகிறது புதிய புயல் சின்னம்.. வந்தது அலர்ட்

அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பிருப்பதாக IMD தெரிவித்துள்ளது. அடுத்த 48 – 72 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நல்வாய்ப்பாக புயலாக மாறாமல் கரையை கடந்த நிலையில், தற்போது புதிதாக புயல் சின்னம் ஒன்று உருவாகியுள்ளது.