News September 14, 2024
ராமர் இல்லாமல் இந்தியா இல்லை: ஆளுநர்

சென்னை ராஜ்பவனில் ‘ஸ்ரீராமா இன் தமிழகம்’ என்ற புத்தகத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டு பேசினார். அப்போது ராமரை நீக்கிவிட்டு பார்த்தால் இந்தியா என்ற நாடே இல்லை என கூறினார். மக்கள் மனங்களில் இருந்து ராமரை ஒருபோதும் நீக்க முடியாது என அவர் தெரிவித்தார். மேலும் தர்மம் இல்லாமல் பாரதம் இல்லை என்றும், சனாதன தர்மம் ஒற்றுமை குறித்து பேசுவதாகவும் தெரிவித்தார்.
Similar News
News November 22, 2025
30 வயதுக்குமேல் உள்ள ஆண்களே.. இத கவனியுங்க!

ஆண்களுக்கும் Skin Care அவசியம். அதிலும் 30 வயதை கடந்த ஆண்கள் சிலவற்றை பின்பற்றாமல் போனால் சீக்கிரமே வயதானவர்கள் போல தோற்றமளிப்பீர்கள். எனவே, என்றென்றும் இளமையாக தோற்றமளிக்க இந்த 4 விஷயங்களை பின்பற்றுங்கள். ➤மைல்டான க்ளன்சரை பயன்படுத்துங்கள் ➤மாய்ஸ்சரைசர், சன் ஸ்கிரீன் மிக மிக முக்கியம் ➤ரெட்டினால் இருக்கும் சீரமை யூஸ் பண்ணுங்க ➤உடற்பயிற்சியும் செய்யவேண்டும் என டாக்டர்கள் சொல்கின்றனர். SHARE.
News November 22, 2025
செல்போனில் இதை மாற்றினால் 3 ஆண்டு ஜெயில்

TRAI தொலைத்தொடர்புச் சட்டம் 2023-ன் கீழ் செல்போனின் IMEI நம்பர், மோடம், சிம் கார்டு, ரேடியோ ஆகியவற்றில் அடையாளங்களை மாற்றுவது ஜாமினில் வெளிவர முடியாத குற்றமாகும். இதனை மீறுவோருக்கு 3 ஆண்டு ஜெயில் (அ) ₹50 அபராதம் (அ) 2-ம் சேர்த்து விதிக்கப்படும் என தொலைத்தொடர்புத் துறை(DoT) எச்சரித்துள்ளது. இதனால், second Hand-ல் செல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்கள் வாங்குவோர் ஜாக்கிரதையாக இருங்கள்.
News November 22, 2025
₹95000000000… அம்மாடியோவ்!

நிதி மோசடி மற்றும் நீதிமன்ற ஆணைகளை பின்பற்றாதது ஆகிய குற்றங்களுக்காக, அமெரிக்க நீதிமன்றம் பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரனுக்கு 1.07 பில்லியன் டாலர் (₹9500 கோடி) அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. பைஜூஸின் அமெரிக்க கிளையான பைஜூஸ் ஆல்பா நிறுவனத்தின் பணம், மோசடியாக வெவ்வேறு கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாகவும், விதிமுறைகள் மீறப்பட்டதாகவும் நடந்துவந்த வழக்கில் தான் நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது.


