News September 14, 2024
ராமர் இல்லாமல் இந்தியா இல்லை: ஆளுநர்

சென்னை ராஜ்பவனில் ‘ஸ்ரீராமா இன் தமிழகம்’ என்ற புத்தகத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டு பேசினார். அப்போது ராமரை நீக்கிவிட்டு பார்த்தால் இந்தியா என்ற நாடே இல்லை என கூறினார். மக்கள் மனங்களில் இருந்து ராமரை ஒருபோதும் நீக்க முடியாது என அவர் தெரிவித்தார். மேலும் தர்மம் இல்லாமல் பாரதம் இல்லை என்றும், சனாதன தர்மம் ஒற்றுமை குறித்து பேசுவதாகவும் தெரிவித்தார்.
Similar News
News November 7, 2025
கோவை பெண் கடத்தல்: புகார் எதுவும் வரவில்லை

கோவை இருகூர் தீபம் நகரில் இளம்பெண் ஒருவரை காரில் <<18222861>>கடத்தி செல்லும் சிசிடிவி<<>> காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பெண் மாயமானது தொடர்பாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை என கோவை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும், சிசிடிவி காட்சியில் கார் நம்பர் தெரியவில்லை என கூறிய அவர், அது கண்டறியப்பட்ட உடன் உண்மை என்ன என்பது தெரியவரும் எனவும் விளக்கியுள்ளார்.
News November 7, 2025
6 ஓவர்களில் 148 ரன்களை விளாசிய ஆப்கானிஸ்தான்!

ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில், ஆப்கானிஸ்தான் 6 ஓவர்களில் 148 ரன்களை குவித்து அசத்தியுள்ளது. கேப்டன் குல்பதின் நைப் 50(12) ரன்களும், ஜனத் 46(11) ரன்களும் விளாசினர். 149 ரன்களை சேஸ் செய்த தென்னாப்பிரிக்க அணி, 6 ஓவரில் 99 ரன்களை மட்டுமே எடுத்து 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
News November 7, 2025
இறந்தவர் உயிருடன் வந்த அதிசயம்

இறந்துவிட்டதாக ஈமச் சடங்குகள் செய்யப்பட்டவர், உயிருடன் வந்தால் எப்படி இருக்கும்? சத்தீஸ்கரில் அதுதான் நடந்திருக்கிறது. மகன் புருஷோத்தமனை காணவில்லை என பெற்றோர் புகாரளித்துள்ளனர். அப்போது, போலீஸுக்கு கிணற்றில் ஒரு சடலம் கிடைத்தது. அதனை தனது மகன் என நினைத்து புருஷோத்தமனின் குடும்பத்தினர் அடக்கம் செய்தனர். திடீர் ட்விஸ்டாக உறவினர் வீட்டிலிருந்த புருஷோத்தமன் வீடு திரும்பியுள்ளார். இதை என்ன சொல்வது?


