News October 13, 2025
அமைச்சரானதால் வருமானமே இல்லை: சுரேஷ் கோபி

மத்திய இணையமைச்சர் பதவியிலிருந்து விலக விரும்புவதாக சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். அமைச்சர் ஆனது முதல் தனக்கு வருமானமே இல்லை என்ற அவர், மீண்டும் சினிமாவில் தொடர விரும்புகிறேன் என கூறினார். சினிமாவை விட்டுவிட்டு அமைச்சராக பதவியேற்பதை என்று தான் ஒருபோதும் விரும்பியதில்லை என்றும் தெரிவித்துள்ளார். கேரளாவின் முதல் BJP MP ஆன சுரேஷின் இந்த பேச்சால், தேசிய தலைமை கலக்கம் அடைந்துள்ளது.
Similar News
News March 7, 2026
அதிமுக கூட்டணியில் இணைந்தார்

திமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த 2 நாளாக புதிய தமிழகம், தேசிய திராவிட கழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுகவினர் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதில், தேசிய திராவிட கழக பொதுச்செயலாளர் பூட்டுதாக்கு நித்தியா, 2026 தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளிப்பதாக அறிவித்துள்ளார். இன்று அல்லது நாளை EPS-ஐ நேரில் சந்தித்து, ஆதரவு கடிதத்தை நித்தியா வழங்கவுள்ளார்.
News March 7, 2026
காங்கிரஸ் வேட்பாளர்கள்.. CM ஸ்டாலின் கொடுத்த அட்வைஸ்!

நீண்ட இழுபறிக்கு பிறகு திமுக – காங்கிரஸ் கூட்டணி இறுதியாகியுள்ளது. இந்நிலையில், 28 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து காங்கிரஸ் தலைவர்களிடம் CM ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, இந்த தேர்தல் மிகவும் முக்கியமானது என்பதால் தொகுதியில் செல்வாக்கு, செலவு செய்யத் தயாராக இருப்பவரை களமிறக்க வேண்டும் என காங்., மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரிடம் வலியுறுத்தியதாக தகவல் கசிந்துள்ளது.
News March 7, 2026
கருவறை வாயிலில் இருப்பவர்கள் யார் தெரியுமா?

கோயில் கருவறைக்கு வெளியே இருபுறமும் துவாரபாலகர்கள் இருப்பார்கள். ஆகம விதிப்படி, கருவறையின் வாயில் காப்பவர்கள் இவர்கள். பக்தர்கள் முதலில் துவாரபாலகர்களை வணங்கிவிட்டு பின்னர், தெய்வத்தை வழிபட வேண்டும் என்பது முன்னோர்கள் கடைபிடித்த விதி. விஷ்ணு ஆலயங்களில் ஜயனும், விஜயனும், சிவாலயங்களில் சண்டனும், பிரசண்டனும் துவாரபாலகர்களாக உள்ளனர். அம்மன் கோயிலில் துவாரபாலகிகளாக ஹரபத்ரா, சுபத்ரா உள்ளனர்.


