News April 2, 2024
முரசொலி நில விவகாரத்தில் மேல் நடவடிக்கை கூடாது

பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் இருப்பதாக எழுந்த புகாரில், மேல் நடவடிக்கை கூடாது என தேசிய SC/ST ஆணையத்தை அறிவுறுத்தியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தப் புகார் குறித்து ஆணையம் விசாரிக்கலாம் என தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து முரசொலி அறக்கட்டளை, ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கில், மத்திய அரசு அளித்த பதிலை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் விசாரணையை ஏப்.25-க்கு ஒத்திவைத்தது.
Similar News
News August 13, 2025
திமுகவில் இணைந்தார் மைத்ரேயன்

அதிமுக முன்னாள் MP மைத்ரேயன், அக்கட்சியில் இருந்து விலகி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். ஏற்கெனவே, முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, புதுக்கோட்டை அதிமுக EX MLA கார்த்திக் தொண்டைமான் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அந்த வரிசையில் தற்போது மைத்ரேயனும் திமுகவில் ஐக்கியமாகியுள்ளார்.
News August 13, 2025
சினிமாவில் 50 ஆண்டு நிறைவு! ரஜினிகாந்துக்கு EPS வாழ்த்து

திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ரஜினிகாந்துக்கு EPS வாழ்த்து தெரிவித்துள்ளார். பொன்விழா ஆண்டில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள ‘கூலி’ படம் வெற்றியடைய வாழ்த்துவதாகவும் X தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். ஏற்கெனவே தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும் ரஜினிக்கு வாழ்த்து கூறியிருந்தார். ரஜினிக்கு திரைத்துறை பாராட்டு விழா நடத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்தார்.
News August 13, 2025
டிசைனிங் ‘ஜாம்பவான்’ குமார் காலமானார்!

1000 படங்களுக்கு மேல் பணியாற்றிய போஸ்டர் & டிசைனிங் ‘ஜாம்பவான்’ குமார்(67) உடல்நலக் குறைவால் காலமானார். 1983-ல் வெளியான ‘சலங்கை ஒலி’ படத்தில் தொடங்கி ‘சபாஷ் நாயுடு’ வரை தொடர்ச்சியாக கமலுடன் குமார் பணிபுரிந்துள்ளார். தேவர் மகன், விருமாண்டி, தளபதி, படையப்பா, கில்லி, வல்லவன் என பல Iconic பட போஸ்டர்கள் இவரின் கைவண்ணம்தான். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP