News February 28, 2025
அமித்ஷா பேச்சில் நம்பிக்கை இல்லை: சித்தராமையா

தொகுதி மறுசீரமைப்பு குறித்து அமித்ஷா பேசுவது நம்பகத்தன்மையோடு இல்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். தென் மாநிலங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் அமித்ஷா பேசுவதாகவும், பாஜகவை எதிர்ப்பதால், தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் செல்வாக்கை பலவீனப்படுத்த மத்திய அரசு விரும்புகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News February 28, 2025
ஆசிய கோப்பை எப்போது? எங்கே?

17ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் டி20 ஃபார்மேட்டில் வரும் செப்டம்பரில் தொடங்க உள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆசிய கோப்பை 2025-ஐ நடத்தும் உரிமையை இந்தியா பெற்றுள்ள போதிலும், இந்தப் தொடர் UAE-இல் நடத்தப்பட வாய்ப்புள்ளது. அதனால், IND vs PAK போட்டிகள் அங்கேயே நடைபெறும் எனக் கூறப்படுகிறது. 2026 T20 WCக்கு தயாராகும் வகையில் இந்த தொடர் நடைபெற உள்ளது.
News February 28, 2025
லேடி சூப்பர்ஸ்டாருக்கு வில்லனாகும் அருண் விஜய்?

அருண் விஜய், தற்போது ஹீரோவாக பிஸியாக இருக்க விதை போட்டதே ‘என்னை அறிந்தால்’ படத்தில் அவரின் வில்லன் கேரக்டர் தான். சின்ன கேப் விட்டு, அவரை மீண்டும் வில்லனாக்க முயற்சி நடைபெறுகிறதாம். இம்முறை, சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ‘முக்குத்தி அம்மன் 2’ படத்தில் வில்லனாக நடிக்க கேட்டு இருக்கிறார்கள். அவர் பெரிய சம்பளம் கேட்க, இன்னும் உறுதி ஆகவில்லை. நயனுக்கு அருண் விஜய் வில்லன்! காம்போ எப்படி?
News February 28, 2025
SEBIக்கு புதிய தலைவர் நியமனம்

SEBIன் புதிய தலைவராக துஹின் கந்தா பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான தற்போதைய தலைவர் மாதபியின் பதவிக்காலம் இன்றோடு முடிவடையும் நிலையில், அடுத்த 3 ஆண்டுகளுக்கு பாண்டே தலைமை ஏற்றுள்ளார். ஒடிஷாவின் 1987 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான பாண்டே, நிதித்துறை செயலாளர், மத்திய திட்டக் குழு இணைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.