News July 24, 2024
கம்பீர், கோலி இடையே பகையில்லை: நெஹ்ரா

கம்பீருக்கும், கோலிக்கும் இடையே எந்த பகையுணர்ச்சியையும் தான் பார்க்கவில்லை என முன்னாள் இந்திய பவுலர் ஆஷிஸ் நெஹ்ரா கூறியுள்ளார். களத்தில் எதிரெதிர் அணியில் விளையாடிய போது மோதலில் ஈடுபட்ட பல வீரர்கள், ஓரணியாக திரளும் போது சிறப்பாக ஆடியுள்ளதாகவும் கம்பீரும், கோலியும் உணர்ச்சிமிக்க துடிப்பான வீரர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இருவரும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் என்றும் கூறியுள்ளார்.
Similar News
News March 4, 2026
கிளம்பினார் விஜய்

தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் நடைபெறும் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்க சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து விஜய் சற்றுமுன் புறப்பட்டார். சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி செல்லும் அவர், அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் காரில் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதற்கிடையில், தவெக கூட்டத்தில் பங்கேற்க காலையில் இருந்து தவெகவினர் குவியத் தொடங்கியுள்ளனர்.
News March 4, 2026
நாட்டின் பணக்கார மாவட்டங்களின் டாப் 5 லிஸ்ட்!

தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் நாட்டில் பணக்கார மாவட்டம் எது என்ற பட்டியல் வெளிவந்துள்ளது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தின் வரையிலான கணக்கீடாகும். இதில் எந்தெந்த மாவட்டங்கள் டாப்பில் இருக்கின்றன என்பதை அறிய மேலே உள்ள போட்டோவை இடது புறமாக Swipe செய்யவும். நீங்க மட்டும் இந்த தகவலை தெரிஞ்சிக்காம, நண்பர்களுக்கும் அதிகளவில் ஷேர் பண்ணுங்க.
News March 4, 2026
கூட்டணி முடிவு… பின்வாங்கினார்

தனிநபர்களுக்கு இடையே வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் கட்சி என்பது அனைவரை விடவும் பெரியது என மாணிக்கம் தாகூர் எக்ஸ்-ல் பதிவிட்டுள்ளார். கூட்டணி விவகாரத்தில் தலைமை எந்த முடிவு எடுத்தாலும், அதை ஒழுக்கத்துடன் ஏற்றுக்கொள்வேன் என்ற அவர், ஒற்றுமை மிகப்பெரிய பலம் எனவும் கூறியுள்ளார். இந்நிலையில், இதுவரை திமுகவை சீண்டி வந்த மாணிக்கம் தாகூர் தற்போது பின்வாங்கியிருப்பது ஏன் என கேள்வி எழுப்பிவருகின்றனர்.


