News June 25, 2024
தமிழ்நாட்டில் போதைப்பொருள் இல்லையா?: ஆளுநர்

போதைப்பொருள் புழக்கம் குறித்து தமிழ்நாடு அதிகாரிகளுக்கு எப்படி தெரியாமல் உள்ளது? என ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார். பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே போதைப்பொருளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் கூறிவருவதாகவும், ஆனால், போதைப்பொருள் இல்லையென அதிகாரிகள் கூறிவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் போதைப்பொருள் இல்லை என்ற மனநிலையில் இருந்து வெளியே வர வேண்டும் என்றார்.
Similar News
News November 14, 2025
MGB கூட்டணி தோல்விக்கு 3 காரணங்கள்

பிஹார் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் MGB கூட்டணியின் தோல்விக்கு இந்த 3 காரணங்களை சொல்லலாம்: 1) NDA-வில் அதிக கட்சிகள் உள்ளன. MGB-யில் சில கட்சிகள் மட்டுமே. 2) தேர்தலுக்கு முன்பே பெண்களுக்கு <<18261283>>₹10,000 கொடுத்தது<<>>, அவர்களின் வாக்கை மொத்தமாக NDA பக்கம் திருப்பிவிட்டது. 3) MGB கூட்டணி யாதவர்கள், முஸ்லீம் வாக்காளர்களை நம்பி இருக்க, NDA அனைத்து சமூக வாக்காளர்கள், EBC வாக்குகளில் கவனம் செலுத்தியது.
News November 14, 2025
இந்த தம்பியை பார்த்தால் தன்னம்பிக்கை தானா வரும்..

பனியில் உறைந்த தலைமுடி, புருவத்துடன், கன்னங்கள் சிவந்தபடி, ஆண்டு இறுதித்தேர்வுக்கு சிறுவன் ஒருவன் வகுப்பறைக்குள் வந்துள்ளான். என்ன இது? என ஆசிரியர் ஆச்சரியத்துடன் கேட்க, -9° செல்சியஸில் 5 கிமீ., நடந்தே பள்ளிக்கு வந்தது தெரியவந்தது. எவ்வளவு தடைகள் வந்தாலும், தனது இலக்கை அடைய வழிவகுக்கும் கல்விக்காக சீனாவைச் சேர்ந்த இச்சிறுவனின் பயணம் நம்மை சிலிர்க்க வைக்கிறது. படிப்பு முக்கியம் சிதம்பரம்!
News November 14, 2025
இரண்டாக உடையுமா இந்தியா?

திபெத் பீடபூமியில் சமீபமாக அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இதை ஆராய்ந்த போது, இமயமலையின் கீழே இந்தியா இரண்டாக உடைந்து வருகிறது என்ற விஷயத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்திய புவித்தட்டின் (tectonic plate) மேல்பகுதி வடக்கே நகர்ந்து வரும் நிலையில், கீழ்ப்பகுதி உடைந்து பூமிக்குள் மூழ்கி வருகிறது. இதனால், எதிர்காலத்தில் இந்தியாவின் ஒருபகுதி தனியே பிரிந்து, தீவாக கூட மாற வாய்ப்புண்டாம்.


