News April 15, 2025
3 அமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்!

சட்டப்பேரவையில் 3 அமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரக் கோரி சபாநாயகரிடம் அதிமுக கடிதம் கொடுத்துள்ளது. அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, செந்தில் பாலாஜி ஆகியோருக்கு எதிராக இந்த கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பொன்முடி பெண்கள் மற்றும் இந்து மதத்தைக் கேவலப்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
Similar News
News December 5, 2025
14 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்

அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என IMD கணித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வெளியே சென்றால் மறக்காமல் குடை எடுத்துட்டு போங்க..
News December 5, 2025
DRDO-வில் 763 பணியிடங்கள்.. Apply பண்ணுங்க

DRDO-வின் பணியாளர் திறன் மேலாண்மை மையம் 763 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் 561 senior technical assistant-B, 203 technician-A பணியிடங்கள் அடங்கும். விண்ணப்பதாரர்கள் 18 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இதற்கு வரும் டிச.9-ம் தேதி முதல் www.drdo.gov.in என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் நீங்கள் விண்ணப்பிக்கலாம். SHARE IT
News December 5, 2025
550 விமானங்கள் ரத்து.. மன்னிப்பு கேட்ட இண்டிகோ

புதிய விமானப் பணிநேர வரம்பு விதிகளை, பின்பற்றிட இண்டிகோவிடம் போதிய விமானிகள் இல்லை என கூறப்படுகிறது. இதனால், நேற்று 550 விமானங்களின் சேவையை இண்டிகோ ரத்து செய்தது. இதற்காக விமானப் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுள்ள இண்டிகோ, இப்பிரச்னையை சரிசெய்வதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. மேலும், பிப்.10 வரை விதிகளில் இருந்து தளர்வு கோர இண்டிகோ முடிவெடுத்துள்ளது.


