News April 15, 2025
3 அமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்!

சட்டப்பேரவையில் 3 அமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரக் கோரி சபாநாயகரிடம் அதிமுக கடிதம் கொடுத்துள்ளது. அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, செந்தில் பாலாஜி ஆகியோருக்கு எதிராக இந்த கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பொன்முடி பெண்கள் மற்றும் இந்து மதத்தைக் கேவலப்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
Similar News
News November 19, 2025
SIR பணியால் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்களா BLO?

TN உட்பட பல்வேறு மாநிலங்களில், SIR பணிகளில் பூத் லெவல் ஆபிசர் எனும் BLO-கள் வேலை செய்து வருகின்றனர். ஆனால் இந்த பணியில் ஈடுபட்டுள்ள BLO-களும் வேலை அழுத்தம் பல மடங்கு உள்ளதாக கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் கேரளா, ராஜஸ்தானை சேர்ந்த 2 அதிகாரிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். குறுகிய நேரத்தில் SIR பணிகளை முடிக்க ECI திட்டமிட்டுள்ளதே இதற்கு காரணம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
News November 19, 2025
வயிறு முட்ட சாப்பிடும் ஆளா நீங்க? அப்போ இது முக்கியம்

சிக்கன், மட்டன் போன்ற இறைச்சி உணவுகளை வயிறு முட்ட சாப்பிட்ட பிறகு அந்த உணவானது ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். இதனால் இரவில் தூக்கம் வருவதும் கடினம். இதற்கு ஒரே தீர்வு ஒரு கிளாஸ் சூடான நீர்தான் என டாக்டர்கள் கூறுகின்றனர். ஆனால் ஒரே நேரத்தில் அதிகமாக தண்ணீர் குடிக்க கூடாதாம். சிறிது இடைவெளி விட்டு குடித்தால் செரிமானம் இலகுவாக இருக்குமாம். மூக்கு முட்ட சாப்பிடும் உங்க நண்பர்களுக்கு Share பண்ணுங்க.
News November 19, 2025
டெல்லி குண்டுவெடிப்பு: மும்பையில் சிக்கிய மூவர்

டெல்லி குண்டுவெடிப்பில் தொடர்புள்ளதாக மும்பையை சேர்ந்த 3 பேரை பிடித்து NIA விசாரித்து வருகிறது. முதல்கட்ட விசாரணைக்கு பின் மூவரும் டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். பிரத்யேக தகவல் தொழில்நுட்ப செயலி மூலம் இவர்கள் தகவல்களை பரிமாறிக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் மும்பையை தொடர்ந்து மகாராஷ்டிராவின் பல்வேறு மாவட்டங்களிலும் NIA தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறது.


