News April 29, 2025
பங்குச்சந்தைகளில் மாற்றம் இல்லை

இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்ற, இறக்கங்களை கண்டு இறுதியில் பெரிய மாற்றமின்றி வர்த்தகத்தை நிறைவு செய்தது. காலையில், வர்த்தகம் தொடங்கியவுடன், 120 புள்ளிகள் உயர்ந்த நிஃப்டி, மதியம் 12 மணியளவில் சரிவைக் கண்டது. சில நேரங்களில் நேற்றைய புள்ளிகளுக்கு கீழ் சென்ற நிஃப்டி, வர்த்தக நேர முடிவில் 7 புள்ளிகள் மட்டும் உயர்ந்து 24,335 புள்ளிகளில் இருந்தது. சென்செக்ஸ் இன்று 70 புள்ளிகள் உயர்ந்தது.
Similar News
News April 29, 2025
IPL: DC அணிக்கு 205 ரன்கள் இலக்கு

டெல்லியில் நடைபெற்று வரும் IPL போட்டியில், DC அணிக்கு 205 ரன்களை இலக்காக நிர்ணயித்திருக்கிறது KKR. டாஸ் வென்ற DC அணியின் கேப்டன் அக்சர் படேல், பவுலிங் செய்ய தீர்மானித்தார். அதனைத் தொடர்ந்து பேட்டிங்கில் களமிறங்கிய KKR அணியின் வீரர்கள் அனைவரும் நிலைத்து விளையாடி ரன் சேர்த்தனர். அதிகபட்சமாக ரகுவன்ஷி 44 ரன்கள் குவித்தார். பின்னர், 20 ஓவர்கள் முடிவில் KKR 9 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்தது.
News April 29, 2025
ஆணுறை: செய்யக்கூடாத 7 விஷயங்கள்

*Expiry date முடிந்த, சேதமான, ஒட்டிக்கொண்ட ஆணுறைகளை பயன்படுத்தக் கூடாது *அலர்ஜி ஏற்பட்டால் தவிர்க்கவும் *வெப்பம் உள்ள இடங்களில் வைக்கக் கூடாது *காண்டம் கவரை பிரிக்க பற்கள், கத்தரிக்கோல், நகங்கள், அல்லது வேறு எந்த கூரான பொருள்களையும் பயன்படுத்தக் கூடாது *எண்ணெய், வாசலின், கிரீம் எதையும் அதன்மீது பயன்படுத்தக் கூடாது *ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் *டாய்லெட்டில் போட்டு ஃபிளஷ் செய்யக் கூடாது.
News April 29, 2025
ஷாலினியை புகழ்ந்த அஜித்

33 வருடங்களாக என் வேலையை நேசித்து செய்கிறேன், என்னுடைய வாழ்க்கையை எளிதாக வாழ விரும்புகிறேன் என்று நடிகர் அஜித் முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். என்னுடைய மிகப்பெரிய பலம் எனது குடும்பத்தாரும், எனது மனைவி, குழந்தைகளும் தான். குறிப்பாக எனது மனைவி ஷாலினி என்னுடைய தூணாக உள்ளார். எனக்காக நிறைய விஷயங்களை தியாகம் செய்த அவருக்குதான், என்னுடைய சாதனைகள் எல்லாம் சேரும் எனவும் தெரிவித்துள்ளார்.