News January 1, 2025
சிறுசேமிப்பு திட்ட வட்டியில் மாற்றமில்லை: மத்திய அரசு

வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் நடைமுறையில் உள்ள சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டிவிகிதத்தை 3 மாதங்களுக்கு ஒருதடவை மத்திய அரசு மாற்றி அமைத்து வருகிறது. நடப்பு நிதியாண்டின் 4வது காலாண்டுக்கான (ஜன.1 முதல் மார்ச் 31ம் தேதி வரை) சிறுசேமிப்பு திட்ட வட்டிவிகிதம் குறித்த அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டது. அதில், சிறுசேமிப்பு திட்ட வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறியுள்ளது.
Similar News
News December 20, 2025
முகப்பருக்களே வரக்கூடாதா? இதுதான் வழி!

நாம் சாப்பிடும் சில உணவுகள், சரும ஆரோக்கியத்தை பாதிக்கும். அவற்றை தவிர்த்தால் முகத்தில் பருக்கள், வறட்சியை கட்டுப்படுத்தலாம் என்கின்றனர் டாக்டர்கள். *கூல் ட்ரிங்ஸ் – இன்சுலின் அளவை அதிகரிக்கிறது *சிப்ஸ் – முகப்பருக்களை மோசமாக்கும் *பாஸ்தா – ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் *ஐஸ்கிரீம் – முகப்பருவை ஏற்படுத்தலாம் *பதப்படுத்தப்பட்ட உணவுகள் சருமத்தை பாதிக்கும் *இனிப்புகள், சரும பிரச்னைகளை உண்டாக்கும்.
News December 20, 2025
₹1,05,000 சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 394 Non-executive பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. B.E, B.Tech, Diploma, ITI படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வு, ஆவண சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். ₹25,000-₹1,05,000 வரை சம்பளமாக வழங்கப்படும். இதற்கு ஜன.9-ம் தேதிக்குள் <
News December 20, 2025
பொங்கலுக்கு பிறகு பாருங்கள்: செங்கோட்டையன்

தவெக களத்தில் இல்லை என <<18610376>>தமிழிசை<<>> கூறியதற்கு பதிலளித்துள்ள செங்கோட்டையன், தவெக களத்தில் இருக்கிறதா, இல்லையா என்பதை தேர்தல் முடிவுகள் சொல்லும் என்று தெரிவித்துள்ளார். தவழும் குழந்தைகள் தான் பெரியவர் ஆவார்கள், பெரியவர் ஆன பிறகே தன்னாட்சியை நடத்துவார்கள் என்று அவர் கூறியுள்ளார். மேலும், பொங்கலுக்கு பிறகு தவெகவின் திருப்புமுனையை பார்த்து நாடே வியக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


