News March 4, 2025
எந்த ஜாதியும் கோயில்களுக்கு உரிமை கொண்டாட முடியாது

எந்த ஜாதியும் கோயில்களுக்கு உரிமை கோர முடியாது என சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. ஜாதி அடிப்படையில் கோயிலை நிர்வகிப்பது என்பது மத நடைமுறை அல்ல எனக் குறிப்பிட்ட கோர்ட், பெரும்பாலான பொதுக் கோயில்கள், சில ஜாதியினரின் கோயில்கள் என முத்திரை குத்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. மேலும், ஜாதி பாகுபாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள்தான் மதப் பிரிவு என்ற போர்வையில் வெறுப்பை உமிழ்வதாகவும் தெரிவித்துள்ளது.
Similar News
News March 5, 2025
டிரம்ப் வைத்த செக்.. பணிந்த ஜெலன்ஸ்கி

போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா உடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா ஒப்புக்கொண்டால் முதற்கட்டமாக கைதிகளை பரிமாறுவது, வான் வழி, கடல் வழி போரை நிறுத்த தாங்களும் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார். அமைதி பேச்சுவார்த்தைக்கு அடம்பிடித்து வந்த ஜெலன்ஸ்கி, உக்ரைனுக்கான ராணுவ நிதியை டிரம்ப் நேற்று நிறுத்தியதும், தற்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
News March 5, 2025
ஸ்டேஷன் மாஸ்டரை பலி வாங்கிய கூகுள் மேப்!

நாடு முழுவதும் கூகுள் மேப்பால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், இன்று மற்றொரு சோகம் நிகழ்ந்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரான பாரத் பார்தி (43) என்பவர் தனது உறவினர் திருமணத்திற்காக நொய்டாவுக்கு காரில் சென்றுள்ளார். அப்போது கூகுள் மேப் காட்டிய வழியில் சென்ற அவரது கார், நேராக ஒரு கால்வாயில் விழுந்தது. இதில் காருக்குள் தண்ணீர் புகுந்ததில் அவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.
News March 5, 2025
ரோகித்துக்கு பக்க பலமாக இருந்த தூண்கள்

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 1st Semi-Final-லில் AUS அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா (267/6) வீழ்த்தியது. ஆஸி., அணியில் கேப்டன் ஸ்மித் மட்டுமே சிறப்பாக செயல்பட்டார். மற்ற வீரர்கள் அவருக்கு உதவி செய்யவில்லை. ஆனால், இந்திய அணியில் கேப்டன் சரியாக விளையாடாத போதும், பேட்டிங்கில் கோலி, ஷ்ரேயாஸ், ராகுல், ஹர்திக், பவுலிங்கில் ஷமி, ஜடேஜா, வருண் சிறப்பாக செயல்பட்டு அணியை வெற்றிபெற செய்தனர்