News March 4, 2025
எந்த ஜாதியும் கோயில்களுக்கு உரிமை கொண்டாட முடியாது

எந்த ஜாதியும் கோயில்களுக்கு உரிமை கோர முடியாது என சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. ஜாதி அடிப்படையில் கோயிலை நிர்வகிப்பது என்பது மத நடைமுறை அல்ல எனக் குறிப்பிட்ட கோர்ட், பெரும்பாலான பொதுக் கோயில்கள், சில ஜாதியினரின் கோயில்கள் என முத்திரை குத்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. மேலும், ஜாதி பாகுபாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள்தான் மதப் பிரிவு என்ற போர்வையில் வெறுப்பை உமிழ்வதாகவும் தெரிவித்துள்ளது.
Similar News
News December 15, 2025
100 நாள் வேலை திட்டத்தை சின்னாபின்னமாக்கும் அரசு: CM

புதிய ‘VB-G RAM G’ திட்டத்தை கைவிட வேண்டும் என CM ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மகாத்மா காந்தி <<18571984>>100 நாள் வேலை<<>> திட்டத்தை பாஜக அரசு சின்னாபின்னமாக்குகிறது. 100% மத்திய அரசின் நிதியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்துக்கு இனி 60% மட்டுமே ஒதுக்குவார்கள் என்ற அவர், வறுமை இல்லாத மாநிலம் என்பதற்காக, இருப்பதிலேயே குறைவாகத்தான் இத்திட்டத்தின் பயன்கள் TN-க்கு கிடைக்கும் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
News December 15, 2025
அட முள்ளங்கியில் இவ்வளவு நன்மைகளா!

கிழங்கு வகைகளில் ஒன்றான முள்ளங்கியில் வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், கால்சியம், இரும்புச்சத்து, நீர்ச்சத்து என பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதை அடிக்கடி சாப்பிட்டால் பல நன்மைகள் ஏற்படும் என டாக்டர்கள் கூறுகின்றனர். *செரிமான மண்டலத்தை சீராக்கும் *கல்லீரல் கொழுப்பை கரைக்க உதவும் *எலும்புகளை வலுப்படுத்தும் *காய்ச்சல், தொண்டை வீக்கம், பசியின்மையை சரி செய்யும் *உடலை நீரேற்றமாக வைத்திருக்கும்.
News December 15, 2025
ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு அறிவிப்பு

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் <<18561240>>e-KYC அப்டேட்<<>> செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. தமிழகத்தில் குறிப்பாக, 36 லட்சம் பேர் விரல் ரேகையை பதிவு செய்யாமல் இருப்பதாகவும், இதனை விரைந்து முடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், விரல் ரேகையை பதிவு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக TN அரசு விளக்கம் அளித்துள்ளது. ரேகையை பதிவு செய்யாதவர்கள் விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.


