News December 5, 2024
NO பேனர், NO கட் அவுட்.. DMK

CM, Dy CM, அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியின்போது, போக்குவரத்து, மக்களுக்கு இடையூறாக பேனர்கள், கட் அவுட், பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது என்று கட்சியினருக்கு திமுக தலைமை தடை விதித்துள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதமும் இதேபோல் அறிவிப்பு வெளியானது. இருந்தபோதிலும், திமுகவினர் தங்களது செல்வாக்கை தலைமைக்கு காட்ட, பேனர்கள் வைத்தனர்.
Similar News
News October 22, 2025
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா: குவியும் பக்தர்கள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று தொடங்குகிறது. இதையொட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 27-ம் தேதி மாலை நடைபெற உள்ளது. திருவிழா நாட்களில் தங்கி விரதம் இருக்கும் பக்தர்களுக்கு கோயில் வளாகத்தில் 18 இடங்களில் தற்காலிக கொட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது.
News October 22, 2025
குழந்தைகளின் சளி இருமலை விரட்ட குட்டி டிப்ஸ்!

▶குழந்தையின் ஆடை அல்லது தலையணையில் சில துளிகள் யூகலிப்டஸ் எண்ணெய் தடவினால், அதிலிருந்து வரும் நறுமணம் குழந்தையின் நாசியை திறந்து இருமலிலிருந்து நிவாரணம் அளிக்கும். ▶குழந்தையின் தொண்டை இதமாக இருக்க காய்கறி அல்லது சிக்கனில் சூப் செய்து கொடுக்கலாம். ▶மஞ்சளில் பாக்டீரியா பண்புகள் உள்ளதால், இரவு பாலில் மஞ்சள் கலந்து கொடுக்கலாம். ▶தேனுடன் இஞ்சி நசுக்கி சாப்பிட்டு வந்தால் சளி இருமல் குணமடையும்.
News October 22, 2025
கரூர் CBI விசாரணையை கண்காணிக்கும் சிறப்பு குழு

கரூரில் விஜய் பரப்புரைக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் CBI விசாரணையை கண்காணிக்கும் சிறப்பு குழுவில் இடம்பெற்றுள்ள IPS அதிகாரிகளின் விவரங்கள் வெளியாகியுள்ளது. உச்சநீதிமன்ற Retd.நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவில், TN கேடரை சேர்ந்த மூத்த IPS அதிகாரிகள் சுமித் சரண், சோனல் மிஷ்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.