News March 24, 2025

நிதிஷ் குமாருக்கு மனநிலை சரியில்லை – PK

image

பிஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தேசிய கீதத்தை அவமதித்ததாக சர்ச்சை எழுந்த நிலையில், அவரது மனநிலை சரியில்லை என பிரசாந்த் கிஷோர்(PK) விமர்சனம் செய்துள்ளார். நிதிஷுக்கு அவரது அமைச்சரவையில் இருப்பவர்களின் பெயர்களே தெரியாது என தெரிவித்த அவர், நிதிஷ் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். நிதிஷின் மனநிலை சரியில்லை என்பது பிரதமர் மோடிக்கு தெரிந்திருக்கும் என்றும் PK குறிப்பிட்டார்.

Similar News

News March 25, 2025

குஜராத் அணியில் 4 தமிழக வீரர்கள்…!

image

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது. அந்த அணியின் பிளேயிங் XI-ல், 3 தமிழக வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். சாய் கிஷோர், சாய் சுதர்சன், ஷாருக் கான் ஆகிய 3 வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இம்பேக்ட் பிளேயராக களமிறக்கப்படுபவர்களின் லிஸ்ட்டில் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளார். இதுபற்றி என்ன நினைக்கிறீங்க?

News March 25, 2025

மீண்டும் தலைவர் ஆகிறார் அண்ணாமலை?

image

தமிழக பாஜக தலைவராக மீண்டும் அண்ணாமலை நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அவரது பதவிக்காலம் நிறைவடைந்திருக்கும் நிலையில், புதிய தலைவரை நியமிக்கும் பணிகளை பாஜக கடந்த மாதம் தொடங்கியது. இந்நிலையில், தேர்தல் நெருங்குவதால், அண்ணாமலையின் தலைவர் பதவியை நீட்டிப்பு செய்ய பாஜக தலைமை திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்த வாரத்தில் அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது.

News March 25, 2025

அவர் ஆண்களை விரும்புகிறார்: மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு

image

பிரபல பாக்சிங் வீராங்கனை சவீட்டி, தன் கணவனும் இந்திய கபடி அணியின் முன்னாள் கேப்டனுமான தீபக் ஹூடா மீது <<15880251>>வன்கொடுமை வழக்கு<<>> பதிந்த நிலையில், புது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். விவாகரத்தை மட்டுமே தான் கேட்பதாகவும், தனக்கு சொத்து தேவையில்லை என்றும் தெரிவித்துள்ள சவீட்டி, தன்மீது தவறான இமேஜை ஏற்படுத்த தீபக் முயல்வதாகவும், அவர் ஆண்கள்மீது ஈர்ப்பு கொண்டவர் என்றும் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!