News April 3, 2025
புதிய அவதாரம் எடுக்கும் நித்தியானந்தா…!

கைலாசா நாடு இருப்பதையே பலரும் ஏற்கவில்லை. அதற்குள் நித்தியானந்தா உயிருடனேயே இல்லை என்ற செய்தியும் பரவியது. இதனால், அவர் நேரலையில் வந்து விளக்கம் அளித்தார். அப்போது, உலகின் முதல் ஆன்மிக AI செயலியை உருவாக்கும் பணியில் 2 வருடமாக ஈடுபட்டு வருவதால், நேரலையில் வருவதை குறைத்து கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனை அறிந்து, ‘என் தலைவன் AI வரைக்கும் போயிட்டார்’ என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Similar News
News October 14, 2025
FLASH: சட்டமன்ற வளாகத்தில் பாமக MLA-க்கள் தர்ணா

சட்டமன்ற வளாகத்தில் அன்புமணி தரப்பு MLA-க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாமக, சட்டப்பேரவை குழு தலைவர் பதவியில் இருந்து GK மணியை நீக்கி அன்புமணி அறிவித்திருந்தார். இது தொடர்பாக சபாநாயகரை சந்தித்து MLA-க்கள் SP வெங்கடேஸ்வரன், சிவக்குமார், சதாசிவம் ஆகிய மூவரும் முறையிட்டனர். அதனை ஏற்க மறுத்ததால் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.
News October 14, 2025
அதிமுகவுடன் கூட்டணி.. புதிய முடிவு எடுத்தார்!

DMDK பொதுச்செயலாளர் பிரேமலதா, பொருளாளர் LK சுதீஷின் தாயார் அம்சவேணி கடந்த வாரம் காலமான நிலையில், சுதீஷ் வீட்டிற்கு நேரில் சென்ற SP வேலுமணி ஆறுதல் கூறினார். மேலும், அம்சவேணியின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர், 20 நிமிடங்கள் தனியாக ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது, அதிமுகவுடன் கூட்டணிக்கு வர வலியுறுத்தியதோடு விரைவாக முடிவை அறிவிக்குமாறும் SP வேலுமணி கூறியதாக தெரிகிறது.
News October 14, 2025
போனை இப்படி நோண்டிட்டு இருக்கீங்களா.. உஷார்!

மேலே உள்ள படத்தில் இருப்பதை போல, போனை யூஸ் செய்வோரை பார்த்திருப்போம். ஆனால், இது எவ்வளவு டேஞ்சர் என உங்களுக்கு தெரியுமா? இப்படி கழுத்தை சாய்த்தபடி போனை நோண்டி கொண்டே இருந்ததால், ஜப்பானின் 25 வயது இளைஞர் ஒருவர் ‘Drop Head Syndrome’ என்ற பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரால் தற்போது தலையை நேராகவே வைக்க முடியாவில்லையாம். வருங்காலத்தில் இது பெரிய பிரச்னையாக மாறலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.