News April 3, 2025
புதிய அவதாரம் எடுக்கும் நித்தியானந்தா…!

கைலாசா நாடு இருப்பதையே பலரும் ஏற்கவில்லை. அதற்குள் நித்தியானந்தா உயிருடனேயே இல்லை என்ற செய்தியும் பரவியது. இதனால், அவர் நேரலையில் வந்து விளக்கம் அளித்தார். அப்போது, உலகின் முதல் ஆன்மிக AI செயலியை உருவாக்கும் பணியில் 2 வருடமாக ஈடுபட்டு வருவதால், நேரலையில் வருவதை குறைத்து கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனை அறிந்து, ‘என் தலைவன் AI வரைக்கும் போயிட்டார்’ என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Similar News
News December 7, 2025
வேலூர்: 9 வயது சிறுமி வன்கொடுமை.. 60 வயது முதியவர் கைது!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் 4 ஆம் வகுப்பு படிக்கும் 9 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கூலித் தொழிலாளி வெங்கடேஷ்(60) என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வெங்கடேசன் மீது வழக்கு பதிந்து பின்னர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 7, 2025
புதுகை: மது போதையில் அட்டூழியம்!

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் லட்சுமி தியேட்டர் அருகே பாண்டி (23) என்பவர் மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கீரனூர் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டு அவரை பிணையில் விடுவித்தனர்.
News December 7, 2025
வங்கிகளில் ₹78,000 கோடி உரிமை கோரப்படவில்லை: PM

நாட்டின் வங்கிகளில் உரிமை கோரப்படாமல் ₹78,000 கோடி உள்ளதாக PM மோடி தெரிவித்துள்ளார். இது ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் பணம் என்று குறிப்பிட்ட அவர், அப்பணத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க அரசு முயற்சி எடுத்து வருவதாக கூறியுள்ளார். இதற்காக 500-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் பேசியுள்ளார்.


