News April 3, 2025

புதிய அவதாரம் எடுக்கும் நித்தியானந்தா…!

image

கைலாசா நாடு இருப்பதையே பலரும் ஏற்கவில்லை. அதற்குள் நித்தியானந்தா உயிருடனேயே இல்லை என்ற செய்தியும் பரவியது. இதனால், அவர் நேரலையில் வந்து விளக்கம் அளித்தார். அப்போது, உலகின் முதல் ஆன்மிக AI செயலியை உருவாக்கும் பணியில் 2 வருடமாக ஈடுபட்டு வருவதால், நேரலையில் வருவதை குறைத்து கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனை அறிந்து, ‘என் தலைவன் AI வரைக்கும் போயிட்டார்’ என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Similar News

News November 22, 2025

இனி தனியாரும் அணு மின்சக்தியில் காலூன்றலாம்!

image

வரும் டிசம்பர் 1-ம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில், 10 புதிய மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயர்கல்வி, தேசிய நெடுஞ்சாலை, காப்பீடு என பல துறைகளில் மறுசீரமைப்பு கொண்டு வரப்பட உள்ளது. குறிப்பாக, இதுவரை அரசு மட்டுமே தொடங்கி நடத்தி வந்த அணு மின் நிலையங்களை, இனி தனியாரும் நடத்தும் வகையில் மசோதா அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

News November 22, 2025

உலக VVIP-கள் கூடும் திருமணம்: யார் இந்த ராமராஜு?

image

டிரம்ப்பின் மகன் உள்ளிட்ட உலக பிரபலங்களே நேரில் வந்து வாழ்த்த, உதய்ப்பூர் பங்களாவில் தடபுடலாக தனது மகளின் திருமணத்தை நடத்துகிறார் தொழிலதிபர் ராமாராஜு. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் Ingenus Pharmaceuticals நிறுவனத்தின் தலைவர் தான் ராமராஜு. அமெரிக்க மருத்துவ துறையில் இவர் நன்கு பரிச்சயமானவர். இவரது நிறுவனம் உலகின் பல நாடுகளில் கிளை பரப்பியுள்ளது.

News November 22, 2025

தமிழகத்தின் மூத்த கவிஞர் தமிழன்பன் காலமானார்

image

சாகித்ய அகாடமி விருது வென்ற தமிழகத்தின் மூத்த கவிஞர் தமிழன்பன்(92) காலமானார். மூச்சுத் திணறல் காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உயிர் பிரிந்தது. ஈரோடு சென்னிமலையில் பிறந்த அவர், ஓவியர், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவர் ஆவார். சென்னை தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியுள்ள அவர், தமிழில் எண்ணற்ற கவிதை தொகுப்பு நூல்களையும் வெளியிட்டுள்ளார். RIP

error: Content is protected !!