News April 3, 2025

புதிய அவதாரம் எடுக்கும் நித்தியானந்தா…!

image

கைலாசா நாடு இருப்பதையே பலரும் ஏற்கவில்லை. அதற்குள் நித்தியானந்தா உயிருடனேயே இல்லை என்ற செய்தியும் பரவியது. இதனால், அவர் நேரலையில் வந்து விளக்கம் அளித்தார். அப்போது, உலகின் முதல் ஆன்மிக AI செயலியை உருவாக்கும் பணியில் 2 வருடமாக ஈடுபட்டு வருவதால், நேரலையில் வருவதை குறைத்து கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனை அறிந்து, ‘என் தலைவன் AI வரைக்கும் போயிட்டார்’ என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Similar News

News November 15, 2025

பிஹார் தாக்கம்: பங்குச்சந்தை நிலவரம் என்ன?

image

பிஹார் வாக்கு எண்ணிக்கை காரணமாக இந்திய பங்குச்சந்தைகள், வார இறுதிநாளான நேற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டன. இருப்பினும், வர்த்தக நேர முடிவில் சற்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. அதன்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 84.11 புள்ளிகள் உயர்ந்து 84563 புள்ளிகளுடன் நிறைவு செய்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 31 புள்ளிகள் உயர்ந்து 25,910 புள்ளிகளுடன் நிறைவு செய்தது.

News November 15, 2025

தொண்டர்கள் சோர்வடைய வேண்டாம்: கார்கே

image

பிஹார் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக CONG தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இந்த தோல்வியை கண்டு CONG தொண்டர்கள் சோர்வடைய வேண்டாம். தைரியம், அர்ப்பணிப்புடன் நீண்ட கால போராட்டத்திற்கு நாம் தயாராக வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், தங்களுக்கு வாக்களித்த பிஹார் மக்களுக்கு இதயபூர்வமான நன்றி, ஜனநாயகத்தை காப்பதற்கான தங்களது பயணம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

News November 15, 2025

OFFICIAL: CSK அணியில் இருந்து கான்வே விடுவிப்பு

image

CSK அணியில் இருந்து நியூஸி., பேட்ஸ்மென் டெவான் கான்வே விடுவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, 3 ஆண்டுகளாக தனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, அவர் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 2023 ஐபிஎல் ஃபைனலில் CSK அணி வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் கான்வே. 25 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 47 ரன்களை அடித்து அப்போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

error: Content is protected !!