News October 4, 2025

நீரவ் மோடிக்கு சகல வசதிகளும் கொண்ட சிறை

image

நீரவ் மோடியிடம் ₹13,000 கோடி PNB வங்கி மோசடி குறித்து விசாரிக்கப்பட மாட்டாது என UK அரசிடம் இந்திய அரசு உறுதியளித்துள்ளது. மேலும், சகல வசதிகளையும் கொண்ட தரமான சிறையில் அவர் அடைக்கப்படுவார் என்றும் தெரிவித்துள்ளது. இந்திய சிறைகளின் நிலையை கருத்தில் கொண்டு, நீரவ் மோடியை நாடு கடத்த UK கோர்ட் தயக்கம் காட்டியது. இதேபோல், பெல்ஜியத்தில் உள்ள அவரது உறவினர் மெகுல் சோக்ஸிக்கும் இந்திய அரசு உறுதியளித்தது.

Similar News

News October 4, 2025

AK-630 ரக வான் துப்பாக்கிகளை வாங்க அரசு திட்டம்

image

சுதர்சன சக்ரா திட்டத்தின் கீழ், AK-630 ரக வான் துப்பாக்கிகளை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, பொதுத்துறை நிறுவனமான AWEIL உடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஒரு நிமிடத்தில் 3,000 முறை சுடும் இத்துப்பாக்கியானது, 4 கிமீ தூரம் வரை டிரோன்கள், ஏவுகணைகள், ராக்கெட்களை சுட்டு வீழ்த்தும். இந்திய – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இத்துப்பாக்கிகளை நிலைநிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

News October 4, 2025

கரூர் துயரம்: முடிவை மாற்றினார் இபிஎஸ்

image

கரூர் துயரத்தையொட்டி நெடுஞ்சாலை பகுதிகளில் பரப்புரை செய்ய ஐகோர்ட் தடை விதித்தது. இதற்கிடையே, நாளை குமாரபாளையம், திருச்செங்கோட்டில் இபிஎஸ் பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். ஐகோர்ட் தடையை சுட்டிக்காட்டி அவருக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து, தனது முடிவில் மாற்றம் செய்துள்ள இபிஎஸ், உரிய அனுமதியுடன் அக்.8-ல் அங்கு பரப்புரை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்.

News October 4, 2025

உரிமை கோரப்படாத ₹1.84 லட்சம் கோடி

image

வங்கிகளில் உரிமை கோரப்படாத ₹1.84 லட்சம் கோடி சொத்துக்களை, உரியவர்களுக்கு திருப்பி தரும் பணிகள் தொடங்கியுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். உரிய ஆவணங்களுடன் வந்தால், உடனே பணம் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் எனவும், இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், RBI-ன் UDGAM போர்ட்டல் மூலம் சொத்துக்களை கேட்டு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!