News June 27, 2024

நிஃப்டி 24,000 புள்ளிகளை கடந்து சாதனை

image

கடந்த ஒரு வாரமாக இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளன. இதனையடுத்து, தேசிய பங்குச்சந்தை நிஃப்டி இன்று 24,000 புள்ளிகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. கொரோனா காலத்தில் 8,000 புள்ளிகள் வரை சரிந்த நிஃப்டி, நான்கு ஆண்டுகளில் மூன்று மடங்கு வளர்ச்சி கண்டிருக்கிறது. அதாவது, 2020 ஏப்ரலில் நீங்கள் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்திருந்தால் அதன் மதிப்பு தற்போது 3 லட்சம் ரூபாய்.

Similar News

News December 15, 2025

விவசாயிகளுக்கு உடனே இழப்பீடு வழங்குக: அன்புமணி

image

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இரு மாதங்களாகியும் இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை என்று அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். இழப்பீடு வழங்கும் விஷயத்தில் திமுக அரசு திட்டமிட்டு தாமதம் செய்வதாக சாடிய அவர், கடன் வாங்கியும், கடுமையாக உழைத்தும் வளர்த்தெடுத்த பயிர்களை இழந்து விட்டு தவிக்கும் விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு ₹40 ஆயிரம் வீதம் உடனே இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

News December 15, 2025

BJP-யையும் அரவணைப்போம், ஆனா ஒரு கன்டிஷன்: ரகுபதி

image

ஆள் இல்லாததால் அட்வான்ஸாகவே அதிமுக விருப்பமனு கேட்பதாக அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். யாரும் கட்சியை விட்டு போகக்கூடாது என்பதால் அதிமுக முந்தியுள்ளதாக அவர் கூறினார். திராவிட மாடல் ஆட்சியை ஏற்றுக்கொண்டால் எந்த கட்சியையும், ஏன் பாஜகவை கூட அரவணைப்போம் என ரகுபதி குறிப்பிட்டுள்ளார். மேலும், தலைவர் ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி தான் எங்களது அடுத்த தலைவர் என்றும் அவர் கூறியுள்ளார்.

News December 15, 2025

இரவு 10 மணிக்கு மேல் போனில் இத பார்த்தால் ₹1,000 அபராதம்

image

ரயிலில் இரவு நேரத்தில் பலர் போனில் சத்தமாக ரீல்ஸ் அல்லது யூடியூப் வீடியோ பார்த்தபடி பயணிப்பார்கள். அவர்களுக்கு அது பொழுதுபோக்கு என்றாலும், மற்றவர்களுக்கு எரிச்சல்தானே! ரயில்வே சட்டப்பிரிவு 145-ன் படி, இரவு 10 மணிக்கு மேல் யாரும் போனில் சத்தமாக வீடியோ பார்க்கவோ, சத்தமாக பேசவோ கூடாது என்ற சட்டமே உள்ளது. இதனை மீறுபவர்களுக்கு ₹500- ₹1,000 வரை அபராதம் விதிக்கப்படும். இத்தகவலை அனைவருக்கும் பகிரவும்.

error: Content is protected !!