News June 27, 2024
நிஃப்டி 24,000 புள்ளிகளை கடந்து சாதனை

கடந்த ஒரு வாரமாக இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளன. இதனையடுத்து, தேசிய பங்குச்சந்தை நிஃப்டி இன்று 24,000 புள்ளிகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. கொரோனா காலத்தில் 8,000 புள்ளிகள் வரை சரிந்த நிஃப்டி, நான்கு ஆண்டுகளில் மூன்று மடங்கு வளர்ச்சி கண்டிருக்கிறது. அதாவது, 2020 ஏப்ரலில் நீங்கள் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்திருந்தால் அதன் மதிப்பு தற்போது 3 லட்சம் ரூபாய்.
Similar News
News January 1, 2026
வேலூர்: ஓய்வூதியர்கள் குறைதீர்வு கூட்டம் – கலெக்டர் தகவல்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வரும் ஜனவரி 23-ம் தேதி கலெக்டர் சுப்புலெட்சுமி தலைமையில் ஓய்வூதியர்களுக்கான குறைதீர்வு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைத்து ஓய்வூதியர்கள், ஓய்வூதியர் சங்கங்களின் நிர்வாகிகள் கோரிக்கைகளை வரும் 9-ம் தேதிக்குள் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) அலுவலகத்திற்கு நேரடியாகவோ, தபால் மூலமாகவோ, மின்னஞ்சல் வழியாகவோ அனுப்பி வைக்கலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
News January 1, 2026
ஹேங்கோவர் ஆகிட்டீங்களா? இதை பண்ணுங்க

புத்தாண்டு கொண்டாட்டத்தில் எவ்வளவு குடிக்கிறோம் என்ற அளவு தெரியாமல் குடித்துவிட்டு பலர் ஹேங்கோவர் ஆகியிருப்பாங்க. இதன் காரணமாக தலைவலி, குமட்டல், அஜீரணம், சோம்பல், வயிற்றுவலி போன்றவை ஏற்படலாம். ஏலக்காய், இஞ்சி டீ குடித்தால் ஹேங்கோவரில் இருந்து விடுபடலாம். அதேபோல, எலுமிச்சை சாறுடன், மோர் கலந்து குடித்தால் குமட்டல் நிற்கும். அதிக தண்ணீர் குடிப்பதும், பழங்கள் சாப்பிடுவதும் பலன் தரும். SHARE IT.
News January 1, 2026
FLASH: ஆரம்பமே அட்டகாசம்!

புத்தாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 189 புள்ளிகள் உயர்ந்து 85,409 புள்ளிகளுடனும், நிஃப்டி 51 புள்ளிகள் உயர்ந்து 26,181 புள்ளிகளுடனும் வர்த்தகமாகி வருகின்றன. இதனால், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


