News June 27, 2024
நிஃப்டி 24,000 புள்ளிகளை கடந்து சாதனை

கடந்த ஒரு வாரமாக இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளன. இதனையடுத்து, தேசிய பங்குச்சந்தை நிஃப்டி இன்று 24,000 புள்ளிகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. கொரோனா காலத்தில் 8,000 புள்ளிகள் வரை சரிந்த நிஃப்டி, நான்கு ஆண்டுகளில் மூன்று மடங்கு வளர்ச்சி கண்டிருக்கிறது. அதாவது, 2020 ஏப்ரலில் நீங்கள் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்திருந்தால் அதன் மதிப்பு தற்போது 3 லட்சம் ரூபாய்.
Similar News
News December 30, 2025
திமுகவை ஒழிப்பதே Common Agenda: எல்.முருகன்

கமலாலயம் எழுதிக் கொடுப்பதை தான், அதிமுக அறிக்கையாக வெளியிடுகிறது என CM ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய இணையமைச்சர் எல்.முருகன், திமுக கூட்டணி கட்சிகளுக்கு CM ஸ்டாலின் தான் அறிக்கை எழுதி கொடுக்கிறாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார். திமுகவை ஒழிக்க வேண்டும் என்ற Common Agenda-வுடன் தான், NDA கூட்டணி கட்சிகள் அனைவரும் ஒன்றாக இணைந்து வேலை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
News December 30, 2025
இந்திய அணியின் பேட்டிங் கோச்சாகும் யுவராஜ் சிங்?

இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக யுவராஜ் சிங்கை நியமிக்கலாம் என Ex இங்கிலாந்து வீரர் மாண்டி பனேசர் தெரிவித்துள்ளார். சுப்மன் கில், அபிஷேக் சர்மா ஆகியோரின் மெண்டராக இருக்கும் அவர், பயிற்சியாளாரானால் அது அணிக்கு மேலும் பலம் சேர்க்கும் எனவும் அவர் கூறினார். தற்போது இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக சிதான்ஷு கோடக் உள்ளார். யுவராஜ் சிங் பேட்டிங் பயிற்சியாளராக சரியான தேர்வா?
News December 30, 2025
அனைவருக்கும் ₹15,000.. அரசு மகிழ்ச்சியான அறிவிப்பு

புதிதாக வேலைக்கு சேரும் இளைஞர்கள் அனைவருக்கும் ₹15,000 ஊக்கத்தொகை வழங்குகிறது பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஸ்கர் யோஜனா திட்டம். இத்திட்டத்தில் பயன்பெற EPFO-வில் பதிவு செய்திருக்க வேண்டும், மாத சம்பளம் ₹1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் https://pmvbry.epfindia.gov.in -ல் அப்ளை பண்ணலாம். 2027 ஜூலை வரை இத்திட்டம் செயல்பாட்டில் இருக்கும். அனைவருக்கும் இத SHARE பண்ணுங்க.


