News June 27, 2024
நிஃப்டி 24,000 புள்ளிகளை கடந்து சாதனை

கடந்த ஒரு வாரமாக இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளன. இதனையடுத்து, தேசிய பங்குச்சந்தை நிஃப்டி இன்று 24,000 புள்ளிகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. கொரோனா காலத்தில் 8,000 புள்ளிகள் வரை சரிந்த நிஃப்டி, நான்கு ஆண்டுகளில் மூன்று மடங்கு வளர்ச்சி கண்டிருக்கிறது. அதாவது, 2020 ஏப்ரலில் நீங்கள் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்திருந்தால் அதன் மதிப்பு தற்போது 3 லட்சம் ரூபாய்.
Similar News
News January 2, 2026
விஜய்க்கு எதிராக களமிறங்கும் சிவகார்த்திகேயன்

‘ஜனநாயகன்’ படத்திற்கு போட்டியாக ‘பராசக்தி’ படம் ரிலீசாவது உறுதியாகியுள்ளது. தனது ‘செம்மொழி’ கதையை திருடி ‘பராசக்தி’ படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு தடை கோரியும் உதவி இயக்குநர் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘பராசக்தி’ படத்திற்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுத்துள்ளது. இதனால், பொங்கல் ரேஸில் விஜய்க்கு எதிராக SK களமிறங்குவது உறுதியாகியுள்ளது.
News January 2, 2026
உடனே கோரிக்கைகளை நிறைவேற்றுக: சீமான்

ஆட்சிக்கு வந்தவுடன் இடைநிலை ஆசிரியர்களுக்கு <<18740078>>சம ஊதியம்<<>> வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாமல், திமுக அரசு தொடர்ச்சியாக ஏமாற்றி வருவதாக சீமான் விமர்சித்துள்ளார். அறவழிப் போராட்டங்கள் நடத்தியும், இன்றுவரை உரிய நீதி கிடைக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இனியும் வாட்டி வதைக்காமல், இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
News January 2, 2026
மீண்டும் புயல் சின்னம்.. கனமழை வெளுத்து வாங்கும்

கடந்த 2 நாள்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், தென்மேற்கு வங்கக் கடலில் ஜன.6-ம் தேதியை ஒட்டி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாகக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இன்று நீலகிரி, கோவை, தென்காசி, தேனி மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


