News June 27, 2024

நிஃப்டி 24,000 புள்ளிகளை கடந்து சாதனை

image

கடந்த ஒரு வாரமாக இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளன. இதனையடுத்து, தேசிய பங்குச்சந்தை நிஃப்டி இன்று 24,000 புள்ளிகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. கொரோனா காலத்தில் 8,000 புள்ளிகள் வரை சரிந்த நிஃப்டி, நான்கு ஆண்டுகளில் மூன்று மடங்கு வளர்ச்சி கண்டிருக்கிறது. அதாவது, 2020 ஏப்ரலில் நீங்கள் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்திருந்தால் அதன் மதிப்பு தற்போது 3 லட்சம் ரூபாய்.

Similar News

News December 16, 2025

சற்றுமுன்: வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

image

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்து, ₹90.81 என்ற மிகவும் குறைந்தபட்ச நிலையை அடைந்துள்ளது. இந்தச் சரிவு, இந்திய பொருளாதாரம் & சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயர வாய்ப்புள்ளது. எனவே, ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்த, RBI முக்கிய முடிவுகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News December 16, 2025

BREAKING: பள்ளியில் மாணவன் மரணம்.. தமிழகத்தில் துயரம்

image

திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு மாணவன் மோகித், பள்ளியின் சுவர் இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். அரையாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில், மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது சுவர் இடிந்து தலைமீது விழுந்துள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே மாணவனின் உயிர் பிரிந்தது. உறவினர்கள் மோகித்தின் உடலை கையில் ஏந்தி அழுத சம்பவம் காண்போரையும் கண்கலங்க வைத்தது.

News December 16, 2025

தர்காவின் இடத்தில்தான் தூண் உள்ளது: வக்ஃபு வாரியம்

image

தீபத்தூண் என கூறப்படும் தூண் தர்காவுக்கு சொந்தமான இடத்தில் உள்ளதாக வக்ஃபு வாரிய தரப்பு தெரிவித்துள்ளது. <<18509407>>திருப்பரங்குன்றம்<<>> வழக்கின் மீதான இன்றைய விசாரணையில், மனுதாரரின் இந்த மனுவால் தூண் யாருக்கு சொந்தம், நிலம் யாருக்கு சொந்தம் என்ற பிரச்னை உருவாகியுள்ளதாகவும் வக்ஃபு வாரியம் தரப்பில் கூறப்பட்டது. இதனையடுத்து, தர்கா சர்வே தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய மதுரை HC அமர்வு உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!