News April 10, 2025
தஹாவூர் ராணாவை காவலில் எடுக்க NIA தீவிரம்!

நாடு கடத்தப்பட்டு இன்று இந்தியா கொண்டு வரப்படும் தஹாவூர் ராணாவை காவலில் எடுத்து விசாரிக்க NIA திட்டமிட்டுள்ளது. 2008 மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி தஹாவூர் ராணா, அமெரிக்காவில் இருந்து நேற்று நாடு கடத்தப்பட்ட நிலையில், அவரை மும்பை (அ) டெல்லி சிறையில் அடைக்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. முன்னதாக அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுக்க NIA தீவிரம் காட்டி வருகிறது.
Similar News
News November 23, 2025
சற்றுமுன்: திமுகவில் இணைந்தனர்

2026 தேர்தல் நெருங்குவதால், ஒருபுறம் பரப்புரை & கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாகியுள்ள நிலையில், மறுபுறம் மாற்றுக்கட்சியினரை இணைக்கும் பணியும் வேகமெடுத்துள்ளது. இந்நிலையில், கரூர் தொகுதியின் தேமுதிக நகர துணைச் செயலாளர் ஈஸ்வரன் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகளான யுவராஜ், குபேரன், சந்திரசேகரன், தினேஷ் , சசிகுமார், தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
News November 23, 2025
BREAKING: தமிழகம் முழுவதும் விலை குறைந்தது

வார விடுமுறை நாளான இன்று சிக்கன் கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. கொள்முதல் பண்ணைகளில் (நாமக்கல்) கறிக்கோழி விலை Kg-க்கு ₹4 குறைந்துள்ளது. இதன்படி, கறிக்கோழி Kg (உயிருடன்) ₹94-க்கும், முட்டைக்கோழி ₹122-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மொத்த கொள்முதல் விலை குறைந்ததால், TN முழுவதும் சிக்கன் விலை குறைந்துள்ளது. அதேநேரம் முட்டை விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி ₹6.10-க்கு விற்கப்படுகிறது.
News November 23, 2025
BREAKING: தமிழகத்தில் காலையிலேயே துப்பாக்கிச்சூடு

சிதம்பரத்தில் போலீசாரை தாக்க முயன்றதாக கூறி கஞ்சா வியாபாரி நவீன்(25) மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. காலில் காயமடைந்த நவீன் GH-ல் அனுமதிக்கப்பட்டுள்ளார். 20 கிலோ கஞ்சா வைத்திருந்த வழக்கில் நேற்று நவீன் கைது செய்யப்பட்டார். காலையில், கஞ்சாவை பறிமுதல் செய்ய அழைத்துச் சென்றபோது போலீசாரை தாக்க முயன்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது. <<18355280>>நேற்று சென்னையில்<<>> ஒரு ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்திருந்தனர்.


