News April 10, 2025
தஹாவூர் ராணாவை காவலில் எடுக்க NIA தீவிரம்!

நாடு கடத்தப்பட்டு இன்று இந்தியா கொண்டு வரப்படும் தஹாவூர் ராணாவை காவலில் எடுத்து விசாரிக்க NIA திட்டமிட்டுள்ளது. 2008 மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி தஹாவூர் ராணா, அமெரிக்காவில் இருந்து நேற்று நாடு கடத்தப்பட்ட நிலையில், அவரை மும்பை (அ) டெல்லி சிறையில் அடைக்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. முன்னதாக அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுக்க NIA தீவிரம் காட்டி வருகிறது.
Similar News
News December 5, 2025
FLASH: ஏறுமுகத்தில் பங்குச்சந்தைகள்!

வாரத்தின் கடைசி நாளான இன்று பங்குச்சந்தைகள் ஏறுமுகத்தில் உள்ளன. மும்பையில் நடைபெற்ற நாணயக் கொள்கை குழு(MPC) கூட்டத்தின் முடிவுகளின்படி குறுகிய கால கடன்களுக்கான <<18475076>>வட்டி விகிதத்தை 0.25%<<>> குறைத்து RBI கவர்னர் அறிவித்துள்ளார். இந்த நிலையில், சென்செக்ஸ் 153 புள்ளிகள் உயர்ந்து 85,418 புள்ளிகளிலும், நிஃப்டி 46 புள்ளிகள் உயர்ந்து 26,080 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன.
News December 5, 2025
உங்க ஊரில் வேலை வேணுமா? Way2News-ல் பாருங்கள்!

Way2News ஆப், புதிதாக உள்ளூர் வேலைவாய்ப்புகள் பிரிவை அறிமுகம் செய்துள்ளது. இதில் உங்கள் ஊரில் உள்ள தொழிற்சாலை, அலுவலக, திறன்சார்ந்த மற்றும் டெலிவரி பாய் உள்பட அனைத்து வகை வேலை வாய்ப்புகளையும் தெரிந்துகொள்ளலாம். உங்களுக்கு அருகில் உள்ள வேலைவாய்ப்புகளை அறிய Way2News app-ல் உள்ள Jobs பிரிவில் பார்த்து பயனடையுங்கள். உங்களுக்கு மெனுவில் Jobs பிரிவு வரவில்லை எனில் Way2News App-ஐ அப்டேட் செய்யவும்.
News December 5, 2025
ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% குறைத்த ரிசர்வ் வங்கி

வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% குறைத்து RBI அறிவித்துள்ளது. இதன் மூலம் வட்டி விகிதம் 5.25% ஆக குறைந்துள்ளது. RBI-ன் இந்த அதிரடி முடிவால் வாடிக்கையாளர்களின் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் கணிசமாக குறையும். 2024 அக்டோபரில் 6.50% ஆக இருந்த ரெப்போ வட்டி விகிதம் இந்தாண்டின் இறுதியில் 5.25% ஆக அதாவது 1.25% குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது.


