News April 10, 2025

தஹாவூர் ராணாவை காவலில் எடுக்க NIA தீவிரம்!

image

நாடு கடத்தப்பட்டு இன்று இந்தியா கொண்டு வரப்படும் தஹாவூர் ராணாவை காவலில் எடுத்து விசாரிக்க NIA திட்டமிட்டுள்ளது. 2008 மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி தஹாவூர் ராணா, அமெரிக்காவில் இருந்து நேற்று நாடு கடத்தப்பட்ட நிலையில், அவரை மும்பை (அ) டெல்லி சிறையில் அடைக்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. முன்னதாக அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுக்க NIA தீவிரம் காட்டி வருகிறது.

Similar News

News November 7, 2025

கோவை பெண் கடத்தல்: புகார் எதுவும் வரவில்லை

image

கோவை இருகூர் தீபம் நகரில் இளம்பெண் ஒருவரை காரில் <<18222861>>கடத்தி செல்லும் சிசிடிவி<<>> காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பெண் மாயமானது தொடர்பாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை என கோவை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும், சிசிடிவி காட்சியில் கார் நம்பர் தெரியவில்லை என கூறிய அவர், அது கண்டறியப்பட்ட உடன் உண்மை என்ன என்பது தெரியவரும் எனவும் விளக்கியுள்ளார்.

News November 7, 2025

6 ஓவர்களில் 148 ரன்களை விளாசிய ஆப்கானிஸ்தான்!

image

ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில், ஆப்கானிஸ்தான் 6 ஓவர்களில் 148 ரன்களை குவித்து அசத்தியுள்ளது. கேப்டன் குல்பதின் நைப் 50(12) ரன்களும், ஜனத் 46(11) ரன்களும் விளாசினர். 149 ரன்களை சேஸ் செய்த தென்னாப்பிரிக்க அணி, 6 ஓவரில் 99 ரன்களை மட்டுமே எடுத்து 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

News November 7, 2025

இறந்தவர் உயிருடன் வந்த அதிசயம்

image

இறந்துவிட்டதாக ஈமச் சடங்குகள் செய்யப்பட்டவர், உயிருடன் வந்தால் எப்படி இருக்கும்? சத்தீஸ்கரில் அதுதான் நடந்திருக்கிறது. மகன் புருஷோத்தமனை காணவில்லை என பெற்றோர் புகாரளித்துள்ளனர். அப்போது, போலீஸுக்கு கிணற்றில் ஒரு சடலம் கிடைத்தது. அதனை தனது மகன் என நினைத்து புருஷோத்தமனின் குடும்பத்தினர் அடக்கம் செய்தனர். திடீர் ட்விஸ்டாக உறவினர் வீட்டிலிருந்த புருஷோத்தமன் வீடு திரும்பியுள்ளார். இதை என்ன சொல்வது?

error: Content is protected !!