News November 23, 2024
அடுத்த CM என் தந்தைதான்: ஷிண்டே மகன் அதிரடி

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியின் வெற்றி உறுதியானதை அடுத்து, அடுத்த முதல்வர் ஃபட்னாவீஸா அல்லது ஏக்நாத் ஷிண்டேவா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஏக்நாத் ஷிண்டே மகன் ஸ்ரீநாத் ஷிண்டே கூறுகையில், வளர்ச்சியை மட்டுமே மனதில் வைத்து மக்கள் வாக்களித்துள்ளனர். என்னை பொறுத்தவரை, எனது தந்தை தான் முதல்வர் பதவியில் தொடர வேண்டும் எனக் கூறினார்.
Similar News
News December 4, 2025
புளியங்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு

தமிழ்நாட்டில் தனித்துவமான வேளாண் பொருட்களை கண்டறிந்து அவற்றிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. புளியங்குடி (தென்காசி) எலுமிச்சை, விருதுநகர் சம்பா வத்தல், ராமநாதபுரம் சித்திரைகார் அரிசி, சோழவந்தான் வெற்றிலை, பண்ருட்டி பலாப்பழம், பண்ருட்டி முந்திரி, செட்டிகுளம் சின்ன வெங்காயம், தூயமல்லி அரிசி, மற்றும் கவுந்தப்பாடி நாட்டு சர்க்கரை ஆகிய 9 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
News December 4, 2025
சற்றுமுன்: விடுமுறை இல்லை.. அறிவித்தார் கலெக்டர்

இரவில் இருந்து விட்டுவிட்டு மழைபெய்து வரும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று விடுமுறை அளிக்கப்படவில்லை. பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என்று அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். அதேநேரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
News December 4, 2025
BREAKING: அதிகாலை பயங்கர நிலநடுக்கம்

வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 3.05 மணிக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1-ஆகவும், அதிகாலை 4.45 மணிக்கு வங்கதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4-ஆகவும் பதிவாகியுள்ளது. இதனால், ஏற்பட்ட உயிரிழப்பு, பாதிப்பு குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை.


