News August 6, 2025
முதலிரவு அறையில் சடலமாக கிடந்த புதுமணப்பெண்!

வாழ்க்கையை தொடங்க முதலிரவுக்கு ஸ்வீட் வாங்க சென்ற மாப்பிள்ளை வீடு திரும்பியபோது காலையில் தாலி கட்டிய மனைவி தூக்கில் தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த சோகமான சம்பவம் ஆந்திராவின் சத்ய சாய் மாவட்டத்தில் நடந்துள்ளது. மணமேடையில் புன்னகையுடன் இருந்த ஹர்ஷிதா(22) இந்த முடிவு எடுத்ததற்கான காரணம் தெரியாமல் மாப்பிள்ளை நாகேந்திரன், ஹர்ஷிதாவின் குடும்பத்தினர் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Similar News
News March 3, 2026
தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட்!

திமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சுதீஷ், வேட்பாளர் யார் என்பதை பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பார் என தெரிவித்தார். சட்டமன்ற தொகுதிகள் பங்கீடு குறித்த அறிவிப்பு இன்னும் ஒருவாரத்தில் தெரியவரும் எனவும் கூறியுள்ளார். அதேசமயம் ராஜ்யசபா சீட் சுதீஷுக்கு ஒதுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
News March 3, 2026
காங்கிரஸை சீண்டிய திமுக அமைச்சர்!

தேர்தலில் திமுக தனி மெஜாரிட்டி பெற்று ஆட்சி அமைக்கும் என ரகுபதி கூறியுள்ளார். புதுக்கோட்டையில் பேசிய அவர், திமுகவுடன் இருந்தால்தான் சட்டப்பேரவைக்குள் நுழைய முடியும் என்பது காங்கிரஸ் தலைமைக்கு தெரியும் என்றும், அந்த அந்தஸ்தை இழக்க அவர்கள் விரும்பமாட்டார்கள் எனவும் தெரிவித்தார். <<19287048>>தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நீடிக்கும் நிலையில்<<>>, காங்கிரஸை சீண்டும் வகையில் ரகுபதி பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
News March 3, 2026
பள்ளி மாணவி கர்ப்பம்.. சிறுவன் சிக்கினான்

புத்தகப் பையை சுமக்கும் வயதில், வயிற்றில் குழந்தையை சுமப்பது எத்தகைய கொடுமை? சிவகங்கையில் +1 மாணவியை கிஷோர் என்ற சிறுவன், பிரவீன், சாமியார் ராமநாதன் ஆகிய 3 பேரும் ரேப் செய்துள்ளனர். இதனால், உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவி ஹாஸ்பிடல் சென்றபோது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. பெற்றோர் அளித்த புகாரில் மூவர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கிஷோர் கைது செய்யப்பட்டுள்ளான்.


