News January 1, 2025
புதிய ஆண்டு, புதிய நம்பிக்கைகள்: CM வாழ்த்து

புத்தாண்டு பிறப்பையொட்டி, CM ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் புதிய ஆண்டு, புதிய நம்பிக்கைகள் எனக் குறிப்பிட்டு வாழ்த்தை பகிர்ந்துள்ளார். அதில், 2025இல் உதய சூரியன் உதயமாகும்போது, அன்பு, சமத்துவம், முன்னேற்றத்துடன் 2024-இன் வெற்றிகளைக் கட்டியெழுப்புவோம் என கூறியுள்ளார். அனைவருக்கும் ஒற்றுமை, சாத்தியங்கள் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 3, 2025
BREAKING: இரவில் சந்திப்பு… மீண்டும் இணைகிறாரா OPS?

டெல்லிக்கு OPS சென்றுள்ள நிலையில், அவருக்கு பின்னாடியே குருமூர்த்தியும் விரைந்துள்ளார். இருவரும் நள்ளிரவில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. புதிய கட்சியை தொடங்குவதற்காக OPS டெல்லிக்கு சென்றதாக கூறப்பட்ட நிலையில், மீண்டும் NDA கூட்டணியில் இணைவது குறித்து நட்டாவை சந்தித்து பேசவிருக்கிறாராம். ஒருவேளை ஓபிஎஸ் NDA கூட்டணிக்கு வந்தால், EPS எவ்வாறு அரசியல் காய்களை நகர்த்துவார் என கேள்வி எழுந்துள்ளது.
News December 3, 2025
ஐரோப்பாவுடன் போர் செய்ய ரெடி: புடின்

ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த USA போட்ட டீல் ரஷ்யாவுக்கு சாதகமாக இருப்பதாக ஐரோப்பா விமர்சித்திருந்தது. இதனால் அதில் சில மாற்றங்களை செய்திருந்தது USA. இதனால் கடுப்பான புடின், ரஷ்யாவால் ஏற்றுக்கொள்ள முடியாத கோரிக்கைகளை வரையறுக்க USA-வை ஐரோப்பாவை தூண்டுவதாக விமர்சித்துள்ளார். மேலும், ஐரோப்பாவுடன் போர்புரியும் எண்ணம் இல்லை என்ற அவர், ஆனால் போர்தான் வேண்டுமென்றால் அதற்கும் ரெடி என எச்சரித்துள்ளார்.
News December 3, 2025
கனமழை… அடுத்தடுத்து விடுமுறை அறிவிப்பு

கனமழை எதிரொலியாக அடுத்தடுத்து விடுமுறை அறிவிப்பு வெளியாகி வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், மாணவர்கள் பாதுகாப்பு கருதி கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். ஏற்கெனவே, சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


