News January 1, 2025
புதிய ஆண்டு, புதிய நம்பிக்கைகள்: CM வாழ்த்து

புத்தாண்டு பிறப்பையொட்டி, CM ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் புதிய ஆண்டு, புதிய நம்பிக்கைகள் எனக் குறிப்பிட்டு வாழ்த்தை பகிர்ந்துள்ளார். அதில், 2025இல் உதய சூரியன் உதயமாகும்போது, அன்பு, சமத்துவம், முன்னேற்றத்துடன் 2024-இன் வெற்றிகளைக் கட்டியெழுப்புவோம் என கூறியுள்ளார். அனைவருக்கும் ஒற்றுமை, சாத்தியங்கள் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 7, 2025
கிருஷ்ணகிரி: விபத்தில் பின்பக்க தலையில் அடிபட்டு பலி!

கிருஷ்ணகிரி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாதநபர் ஒருவர் கிருஷ்ணகிரியிலருந்து ஓசூரை நோக்கி பேரண்டபள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் நேற்று (டிச.6) மாலை வரும் பொழுது. பின்னால் வந்த அடையாளம் தெரியாத வண்டி இடித்துச் சென்றதில் கீழேவிழுந்து பின்பக்க தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின் போலீசார் இறந்த நபர் மற்றும் அவரை இடித்துச் சென்ற வாகனம் யார் என்று விசாரித்து வருகின்றனர்.
News December 7, 2025
வங்கிகளில் ₹78,000 கோடி உரிமை கோரப்படவில்லை: PM

நாட்டின் வங்கிகளில் உரிமை கோரப்படாமல் ₹78,000 கோடி உள்ளதாக PM மோடி தெரிவித்துள்ளார். இது ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் பணம் என்று குறிப்பிட்ட அவர், அப்பணத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க அரசு முயற்சி எடுத்து வருவதாக கூறியுள்ளார். இதற்காக 500-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் பேசியுள்ளார்.
News December 7, 2025
அத்திவரதரை போல 3 நாள்களே காட்சி தரும் சுயம்புலிங்கம்!

சென்னை திருவொற்றியூர் தியாகராஜசாமி- வடிவுடையம்மன் கோயிலில், ஆண்டுதோறும் ஒருமுறை மட்டும் ஆதிபுரீஸ்வரர் நாககவசம் திறப்பு விழா நடைபெறுகிறது. கார்த்திகை பெளர்ணமியை முன்னிட்டு, 3 நாள்கள் இயற்கையாக உருவான சிவலிங்கமான ஆதிபுரீஸ்வரர், எந்த அலங்காரமும் இன்றி காட்சியளிக்கிறார். இதுவே இக்கோவிலின் தனிசிறப்பு என பக்தர்கள் நம்புகின்றனர். கடந்த 4-ம் தேதி முதல் ஆதிபுரீஸ்வரரை பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.


