News December 14, 2024
புத்தாண்டு: கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள்!

2025இல் குரு, சனி, ராகு கேது பெயர்ச்சிகள் நிகழ்கின்றன. இதில் 3 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். 1) மீனம்: ஜென்ம சனி ஆரம்பமாகிறது. மன அழுத்தம் உண்டாகும். பதவி உயர்வு, சம்பள உயர்வில் சிக்கல் ஏற்படும். திருமண வாழ்க்கையில் கவனம். 2) சிம்மம்: அஷ்டம சனி தொடங்குகிறது. பணிச்சுமை அதிகரிக்கும். பேச்சில் கவனம் தேவை. 3) கும்பம்: பாத சனி தொடங்குகிறது. உடல்நலனில் கவனம் தேவை. மன உளைச்சல் இருக்கும்.
Similar News
News March 5, 2026
CM பதவியிலிருந்து விலகுவதாக நிதிஷ்குமார் அறிவிப்பு

நிதிஷ்குமார் பிஹார் CM பதவியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். ஆரம்பத்தில் இருந்தே தனக்கு MP ஆக ஆசை இருந்ததாக கூறிய அவர், அதற்காகவே தற்போது CM பதவியை விடுத்து ராஜ்யசபா MP-ஆக போட்டியிடவுள்ளதாக கூறியுள்ளார். மேலும், புதிய ஆட்சிக்கு முழு ஆதரவு அளிப்பேன் என உறுதியளித்துள்ளார். இந்நிலையில், கடந்த நவம்பரில் 10-வது முறையாக CM ஆன இவர் இப்படி அறிவித்ததற்கு தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
News March 5, 2026
சங்கீதா விவாகரத்து.. வீடியோ ஆதாரம் உள்ளதாக தகவல்

விவாகரத்து வழக்கு தொடர்பாக, சங்கீதாவிடம் சில வீடியோ ஆதாரங்கள் உள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இவற்றையெல்லாம் வெளியிட்டு சங்கீதா பிரஸ் மீட் நடத்தவிருந்ததாகவும், அதை விஜய் தரப்பு தடுத்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே, வழக்கில் தேவைப்பட்டால் அந்த நடிகையின் பெயரை வெளியிடுவேன் என சங்கீதா தனது விவாகரத்து மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
News March 5, 2026
ஜெயக்குமார் தவெகவுக்கு வரலாம்: செங்கோட்டையன்

Ex அமைச்சர் ஜெயக்குமாருக்கு இந்த முறை அதிமுகவில் சீட் கிடைக்காது என செங்கோட்டையன் கூறியுள்ளார். இதனால் தவெகவுக்கு ஜெயக்குமார் வரலாம் என ஆஃபர் கொடுத்த அவர், தவெகவுக்கு சென்றுவிடுவேன் என திமுகவை மிரட்டி தான் காங்கிரஸ் அதிக தொகுதிகளை வாங்கியுள்ளதாகவும் பேசியுள்ளார். இதனால் ஜெயக்குமார், செங்கோட்டையனின் ஆஃபரை ஏற்பாரா என அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுந்துள்ளது.


