News March 17, 2024

புதுவை: எல்லைப் பகுதியில் பாதுகாப்பு தீவிரம்

image

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் நேற்று(மார்ச்.17) செய்தியாளர்களிடம் கூறுகையில், பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்தில் முழுவதும் 72 மணி நேரத்திற்குள் அரசியல் தொடர்பான பேனர்கள், சுவரொட்டிகளை அகற்ற அரசியல் கட்சியினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் காரைக்கால் – தமிழகம் எல்லை சோதனை சாவடிகளில் பறக்கும்படை மற்றும் போலீசார் சோதனை பணியில் உள்ளனர் என்று தெரிவித்தார்.

Similar News

News December 14, 2025

புதுவையில் காவல் நிலைய கட்டிட திறப்பு விழா

image

புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில், புதிதாக கட்டப்பட்டுள்ள இலாசுப்பேட்டை காவல் நிலைய கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி காவல் நிலைய கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் உடன் இருந்தனர்.

News December 14, 2025

புதுச்சேரி: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

image

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News December 14, 2025

புதுச்சேரி: ஆடு வளர்ப்பு பயிற்சி அறிவிப்பு

image

புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் மாதூர் கிராமத்தில், இயங்கி வரும் காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில், எதிர்வரும் டிசம்பர் 17 ஆம் தேதி (புதன்கிழமை) அன்று அறிவியல் முறையில் ஆடு வளர்ப்பு என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் பங்குபெற 7904184739 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!