News March 21, 2024
ஏப்ரல் 1 முதல் புதிய விதிகள்

புதிய நிதியாண்டில், கிரெடிட் கார்டு சேவையில் பல மாற்றங்கள் வரவுள்ளன. * SBI கார்டு மூலம் வாடகை செலுத்துவதற்கான ரிவார்டு பாயிண்ட்கள் நிறுத்தப்படுகிறது. *ICICI கார்டில் லவுஞ்ச் அணுகலைப் பெற, 3 மாதங்களில் ரூ.35,000, யெஸ் வங்கி கார்டில் ரூ.10,000 உபயோகித்திருக்க வேண்டும். *AXIS வங்கி ரிவார்டு பாயிண்ட்களை நிறுத்துகிறது. மேலும், லவுஞ்ச் அணுகலுக்கு 3 மாதங்களில் ரூ.50,000 உபயோகித்திருக்க வேண்டும்.
Similar News
News November 15, 2025
ECI திருடனாக மாறிவிட்டது: ஆ.ராசா

பிஹாரில் NDA கூட்டணியின் வெற்றிக்கு, ECI-யின் SIR பணிகள் மறைமுகமாக உதவியதாக காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில், SIR மூலம் ECI திருடனாக மாறிவிட்டது என்று MP ஆ.ராசா விமர்சித்துள்ளார். ECI-ஐ திருடர்களிடம் இருந்து பாதுகாக்க, ஜனநாயகத்தை காப்பாற்ற நாம் போராட வேண்டி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
News November 15, 2025
BREAKING: சிஎஸ்கே அணியில் புதிய நட்சத்திர வீரர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், சஞ்சு சாம்சன் இணைகிறார் என்ற தகவல்கள் கடந்த சில நாள்களாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான், இந்த சஸ்பென்ஸுக்கு தற்போது கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பதிலளித்துள்ளது. X தளத்தில், ‘Time ആയി’ (‘time has come’) என பதிவிட்டு சாம்சன் வருகையை உறுதிப்படுத்தியுள்ளது. CSK-வில் சஞ்சு ஜொலிப்பாரா?
News November 15, 2025
பொங்கல்: ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளீர்களா? ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு உங்கள் நேரத்தை திட்டமிட்டுக் கொள்ளுங்கள். ஜன.15 – பொங்கல் பண்டிகை தினத்தில் ஊருக்கு செல்வதற்கான முன்பதிவு நாளை (நவ.16) தொடங்குகிறது. போகி பண்டிகை தினமான ஜன.14 அன்று ஊருக்கு செல்வதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8:00 மணிக்கு தொடங்கிய நிலையில், 8:02-க்கே அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்துவிட்டன.


