News June 26, 2024
புதிய சாதனை: 100 பந்துகளில் இரட்டை சதம்

இங்கிலாந்தின் கவுண்டி போட்டியில் லெய்செஸ்டர்ஷையர் அணி வீரர் ஜேம்ஸ் கிம்பர் 100 பந்தில் 200 ரன்கள் அடித்துள்ளார். சசெக்ஸ் அணிக்கு எதிராக 127 பந்துகளில் 234 ரன்கள் அடித்து ஆட்டமிழந்த அவர், முதல் தர கிரிக்கெட்டில் அதிவேக இரட்டை சதம் அடித்த 2வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இதில் மொத்தம் 20 பவுண்டரிகள், 21 சிக்ஸர்கள் அடங்கும். இருப்பினும், இப்போட்டியில் லெய்செஸ்டர்ஷையர் 18 ரன்னில் தோல்வியடைந்தது.
Similar News
News March 7, 2026
பழைய சாம்பாரால் பறிபோன உயிர்

பெங்களூருவில் பழைய சாம்பாரால் ஏற்பட்ட சண்டையில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 3 நாள் பழைய சாம்பாரை மீண்டும் சூடுபடுத்தி பரிமாறியதால் கணவன் கோபத்தில் திட்டியுள்ளார். இதில் மனமுடைந்த அவர் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லியை குடித்து உயிரிழந்தார். 27 வயதான இவருக்கு திருமணமாகி 5 வருடங்களான நிலையில் 4 வயதில் குழந்தை உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News March 7, 2026
தோல்வியை நோக்கி செல்லும் இந்தியா

ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான டெஸ்டின் 2-வது இன்னிங்சில் இந்தியா தடுமாறி வருகிறது. இன்றைய 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 105/6 ரன்கள் எடுத்தது. ஏற்கெனவே இந்தியா முதல் இன்னிங்ஸில் 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மறுபுறம் ஆஸ்திரேலியா சதர்லேண்டின் சதத்தால் முதல் இன்னிங்சில் 323 ரன்களை எடுத்தது. 2 இன்னிங்ஸையும் சேர்ந்து சதர்லேண்ட் 6 விக்கெட்களை வீழ்த்தி பவுலிங்கிலும் அசத்தியுள்ளார்.
News March 7, 2026
மனைவியின் தாய்ப்பாலை குடித்த பிரபல நடிகர்

பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா, தனது மனைவியின் தாய்ப்பாலை குடித்ததாக பேசிய செய்தி தற்போது வைரலாகி வருகிறது. நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், புரதச் சத்துக்காக தனது மனைவியின் தாய்ப்பாலை குடித்ததாக கூறியுள்ளார். மேலும், அவரது மனைவி தாஹிரா, 7 sins of being mother என்ற புத்தகம் எழுதியிருந்தார். அதிலும், தனது தாய்ப்பாலை கணவர் குரானா திருடிக் குடித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


