News April 20, 2024
விரைவில் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படும்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த 45,509 பேருக்கு விரைவில் ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விண்ணப்பதாரர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் எனக் கூறியுள்ள அதிகாரிகள், அதன் பிறகு உணவு வழங்கல் துறை அலுவலகத்தில் நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம் எனக் கூறியுள்ளனர்.
Similar News
News August 18, 2025
ஏறுமுகத்தில் இந்திய சந்தைகள்.. யார் யாருக்கு லாபம்?

GST வரியில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்தியப் பங்குச்சந்தைகள் உயர்வை கண்டுள்ளன. காலையில் சுமார் 1,000 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கிய Sensex 676 புள்ளிகள் உயர்ந்து 81,273 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. அதேபோல், Nifty 245 புள்ளிகள் உயர்ந்து 24,876 புள்ளிகளாக நீடிக்கிறது. Maruti Suzuki, Bajaj Auto உள்ளிட்ட நிறுவனங்களில் பங்குகள் கடும் உயர்வை கண்டுள்ளன.
News August 18, 2025
BSF-ல் 3,580 பணியிடங்கள் அறிவிப்பு

எல்லை பாதுகாப்பு படையில் (BSF) உள்ள பெயிண்டர், எலக்ட்ரீசியன் உள்ளிட்ட பணிகளுக்கான கான்ஸ்டபிள் (Tradesman) பதவிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியிடங்கள்: 3,588. கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு/ ITI. வயது வரம்பு: 18 – 25. சம்பளம்: ₹21,700 – ₹69,100. எழுத்து, உடல் திறன் உள்ளிட்ட தேர்வுகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆக.23. விண்ணப்பிக்க இங்கே <
News August 18, 2025
CINEMA ROUNDUP: மீண்டும் காக்கி உடை அணியும் சூர்யா!

★ஆகஸ்ட் 20-ம் தேதி அனுஷ்காவின் ‘காட்டி’ படத்திலிருந்து ‘தசோரா’ பாடல் ரிலீசாகவுள்ளது.
★அட்லீ- அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகி வரும் படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
★அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ‘பாம்ப்’ படம் வரும் செப்டம்பர் 12-ம் தேதி வெளியாகவுள்ளது.
★‘ஆவேசம்’ பட இயக்குநர் ஜீது மாதவன் இயக்கும் படத்தில் சூர்யா போலீஸ் வேடத்தில் நடிக்கவுள்ளாராம்.