News June 5, 2024

அடுத்த வாரம் முதல் புதிய ரேஷன் கார்டு விநியோகம்

image

ஓராண்டுக்கும் மேல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ரேஷன் அட்டை வழங்கும் பணி, அடுத்த வாரம் முதல் தொடங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 2.4 லட்சம் பேர் புதிய ரேஷன் கார்டுக்காக விண்ணப்பித்து காத்திருந்தனர். தற்போது, தேர்தல் நடத்தை விதி நாளை முதல் விலக்கி கொள்ளப்படுவதால், கார்டு தொலைந்தவர்கள், புதிய கார்டு மற்றும் திருத்தம் மேற்கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Similar News

News December 5, 2025

இந்தியா-ரஷ்யா உறவு.. புடின் திட்டவட்டம்

image

இந்தியா, ரஷ்யா இடையிலான ஒத்துழைப்பானது அமெரிக்கா உட்பட எந்தவொரு நாட்டையும் இலக்காக கொண்டதல்ல என்று அதிபர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்ய எண்ணெயை IND வாங்குவது போருக்கு நிதி அளிக்கும் செயல் என்று டிரம்ப் கூறியிருந்த நிலையில், US தங்களிடம் தான் அணுசக்தி எரிபொருள் வாங்குவதாக புடின் குறிப்பிட்டார். தானும் PM மோடியும் ரஷ்யா, இந்தியாவின் நலன்களை பாதுகாப்பதையே நோக்கமாக கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

News December 5, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பொச்சாவாமை
▶குறள் எண்: 540
▶குறள்:
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்.
▶பொருள்: கொண்ட குறிக்கோளில் ஊக்கத்துடன் இருந்து அதில் வெற்றி காண்பதிலேயே நாட்டமுடையவர்களுக்கு அந்தக் குறிக்கோளை அடைவது எளிதானதாகும்.

News December 5, 2025

பகவத் கீதையை புடினுக்கு பரிசளித்த PM மோடி

image

அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள அதிபர் புடினுக்கு PM மோடி பகவத் கீதையை பரிசளித்துள்ளார். இதுபற்றி X-ல் PM மோடி, பகவத் கீதையின் போதனைகள் உலகெங்கிலும் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் என்று தெரிவித்துள்ளார். இதைதொடர்ந்து, லோக் கல்யாண் மார்கில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் அதிபர் புடினுக்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது.

error: Content is protected !!