News May 24, 2024
தேர்தல் முடிவுக்கு பின் புதிய ரேஷன் அட்டை

தமிழகத்தில் 2 லட்சம் பேர் ரேஷன் அட்டை பெற விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு புதிய குடும்ப அட்டை வழங்கப்படும் என உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மகளிர் உரிமைத் தொகை ₹1000 வழங்கும் திட்டத்தால், கடந்த ஜூலை மாதம் முதல் புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவது நிறுத்தப்பட்டது. இதனால், அரசின் நலத்திட்டங்களை பெற முடியாமல் மக்கள் தவித்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 3, 2025
கொலை மிரட்டல்: நடிகர் ‘சித்தப்பா’ சரவணன் சிக்கினார்

ஆவடி கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் சரவணன் மீது அவரது முதல் மனைவி சூர்யா ஸ்ரீ புகார் அளித்துள்ளார். அதில், 2-வது மனைவி ஸ்ரீதேவியுடன் சேர்ந்து, அவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் வீடியோ ஆதாரத்துடன் சூர்யா ஸ்ரீ மனு அளித்துள்ளார். இதுகுறித்து சரவணனிடம் போலீஸ் விசாரிக்க உள்ளது. இருவரும் விவாகரத்து கோரிய வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
News September 3, 2025
சிக்ஸ் பேக் கொண்டு வர ஸ்டெராய்டு? SK விளக்கம்

தன்னைப் பற்றி யூடியூபர்கள் வதந்தி பரப்பியதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். ‘அமரன்’ படத்திற்காக சிக்ஸ் பேக்ஸ் வைக்க ஸ்டெராய்டு பயன்படுத்தியதாகவும், அதனால் தான் நோய்வாய் பட்டதாக, தன்னுடைய போட்டோவை எடிட் செய்து யூடியூபர்கள் பொய்யான thumbnail வைத்து செய்திகளை பரப்பியதாக அவர் நினைவுகூர்ந்துள்ளார். ஆனால், சிங்கிள் பேக் கூட தனக்கு இல்லை என்றும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
News September 3, 2025
BREAKING: கூட்டணியில் இல்லை.. பரபரப்பு அறிவிப்பு

NDA-வில் இருந்து விலகுவதாக அமமுகவின் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். துரோகம் தலைவிரித்து ஆடுவதாக குற்றஞ்சாட்டிய அவர், கூட்டணியில் இருந்து விலகியுள்ளார். இனிமேல் யாருடன் கூட்டணி என்பது குறித்த அறிவிப்பை டிசம்பர் மாதத்தில் வெளியிட இருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். OPS-ஐ தொடர்ந்து, டிடிவி தினகரனும் கூட்டணியில் இருந்து விலகி இருப்பது குறிப்பிடத்தக்கது.