News April 23, 2025
திமுக அமைச்சருக்கு வந்த புதிய சிக்கல்

சொத்துக்குவிப்பு வழக்கில் <<16187361>>துரைமுருகனை <<>> விடுவித்த உத்தரவை ஐகோர்ட் ரத்து செய்தது. ஏற்கெனவே, பொன்முடி, அனிதா ராதாகிருஷ்ணன், KKSSR, தங்கம் தென்னரசு மீதான வழக்குகளும் நிலுவையில் உள்ளன. அதேபோல், சர்ச்சை பேச்சில் பொன்முடிக்கு ஐகோர்ட்டும், செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றமும் செக் வைத்துள்ளன. இந்த விவகாரங்கள் அனைத்தையும் தேர்தல் நேரத்தில் அதிமுக, பாஜக, தவெக கையில் எடுத்து பரப்புரை செய்ய வாய்ப்புள்ளது.
Similar News
News August 14, 2025
தூய்மை பணியாளர்களுக்கான 6 அறிவிப்புகள்

*தூய்மை பணியாளர்களுக்கு நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க தனித் திட்டம். *பணியின் போது இறக்க நேரிட்டால், குடும்பத்தினருக்கு ₹10 லட்சம். *சுய தொழில் தொடங்குவோருக்கு ₹3.50 லட்சம் மானியம். கடனை தவறாமல் செலுத்தினால் 6% வட்டி மானியம். *குழந்தைகள் எந்த பள்ளியில் படித்தாலும், அனைத்து கட்டணங்களும் வழங்கும் வகையில் ‘புதிய உயர் கல்வி உதவித் தொகை திட்டம்’. *வசிப்பிடத்திலேயே சொந்த வீடு. *இலவச காலை உணவு.
News August 14, 2025
‘ஓரணியில் தமிழ்நாடு’ OTP பெற தடை நீட்டிப்பு

திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரையில் OTP பெற இடைக்காலத் தடை தொடரும் என ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கையை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில், DMK தரப்பில் OTP பெறவில்லை என கூறிய நிலையில், எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும், OTP எண் பெறுவது சட்டவிரோதம் எனக் கூறிய கோர்ட் மத்திய, மாநில அரசுகள், DMK பொதுச்செயலாளர் பதில் அளிக்கவும் ஆணையிட்டுள்ளது.
News August 14, 2025
நாய்க்கடியால் இறக்கும் 20,000 பேர்! ரிப்போர்ட் இதோ..

இந்தியாவில் தெருநாய்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து WHO ரிப்போர்ட் வெளியிட்டுள்ளது.
▶இந்தியாவில் ஆண்டுக்கு 18000-20000 பேர் ரேபிஸ் நோயால் இறக்கின்றனர். ▶இந்தியாவில் 1 நாளைக்கு 10,000-க்கும் மேற்பட்டோர் நாய்க்கடிக்கு ஆளாகின்றனர். ▶ 2024-ல் நாடு முழுவதும் 37.2 லட்சம் பேர் நாய் கடியால் பாதிப்பு. ▶2022-2024-ல் அதிக நாய் கடி சம்பவங்கள் மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளது(13.5 லட்சம்)