News April 27, 2025

J&K-வில் புதிய அரசியல் கட்சி உதயம்

image

பஹல்காம் தாக்குதலை அடுத்து J&K-ல் பதற்றம் நிலவிவரும் நிலையில், தடைசெய்யப்பட்ட இயக்கமான ஜமாத்-இ-இஸ்லாமி(JeI) புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளது. த ஜஸ்டிஸ் அண்ட் டெவலப்மெண்ட் ஃப்ரண்ட் (JDF) என்று பெயர் சூட்டப்பட்டுள்ள அக்கட்சிக்கு முன்னாள் JeI நிர்வாகி ஷமீம் அகமது தோக்கர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். J&K உள்ளாட்சி தேர்தலில் அக்கட்சி போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 28, 2025

6வது முறையாக அமைச்சரவை மாற்றம்.. CM சொல்லும் சேதி!

image

CM ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக <<16237354>>அதிரடி மாற்றம்<<>> செய்யப்பட்டுள்ளது. மூத்த தலைவரான பொன்முடி மீது எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை கட்சியில் மற்ற தலைவர்களுக்கான வார்னிங் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். ஏற்கனவே அமைச்சரவைக் கூட்டத்தில் பொதுவெளியில் கவனமாகப் பேசுங்கள் என CM அறிவுறுத்தியுள்ளார். இதனால், கட்சியில் மேலும், சிலர் மீது சாட்டை சுழற்றப்பட உள்ளதாம். உங்கள் கருத்து என்ன?

News April 28, 2025

பயத்தில் நாட்டை விட்டு ஓடும் பாக். தளபதிகள்!

image

பஹல்காம் தாக்குதல் பாகிஸ்தானை கதிகலங்க செய்துள்ளது. இந்தியாவின் பதிலடி குறித்த அச்சத்தில் அந்நாட்டு முக்கிய ராணுவ தளபதிகள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்று வருகின்றனர். தலைமை தளபதி ஆசிம் முனிர் எங்கே இருக்கிறார் என்றே தெரியாத நிலையில், தளபதிகளின் ராஜினாமா குறித்த லெப்டினண்ட் ஜெனரல் உமர் அகமத்தின் கடிதம் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக பாக். அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

News April 28, 2025

பொன்முடி அவுட்…விழுப்புரம் திமுக பரபர

image

சர்ச்சை பேச்சுக்காக கட்சிப் பதவியை இழந்த பொன்முடி, தற்போது அமைச்சரவையில் இருந்தும் விலகியிருப்பது, அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து அவர் பதவிகளை இழந்திருப்பது, விழுப்புரம் மாவட்ட திமுகவில் அவருடைய எதிர்த்தரப்பான செஞ்சி மஸ்தான், லட்சுமணன் கோஷ்டியினரின் கையை ஓங்கச் செய்துள்ளது. மாவட்டம் 3-ஆக பிரிக்கப்பட்டதில் இருந்தே பொன்முடி அதிருப்தியில் இருந்துவந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!