News March 15, 2025
சீமைக் கருவேல மரங்களை அகற்ற புதிய திட்டம்!

நிலத்தடி நீரை உறிஞ்சி வேளாணை அழிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற பட்ஜெட்டில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் 2,500 ஏக்கரில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றி, அங்கு மிளகாய் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார். சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கு இது சரியான வழியாக இருக்கும் என விவசாயிகள் கருதுகின்றனர்.
Similar News
News September 4, 2025
மீண்டும் முதலிடம் பிடித்த சென்னை IIT

17 பிரிவுகளில் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நாட்டில் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் சென்னை IIT முதலிடம் பிடித்துள்ளது. சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் 2-ம் இடமும், பாரதியார் பல்கலைக்கழகம் 10-வது இடமும் பிடித்துள்ளன. சிறந்த கல்லூரிகள் பட்டியலில் கிருஷ்ணம்மாள் கல்லூரி 9-வது, PSG கல்லூரி 10-வது இடத்தையும் பிடித்தன.
News September 4, 2025
தொலைநோக்கு பார்வையுடன் GST வரி மாற்றம்: EPS

GST வரி விதிப்பில் மாற்றம் கொண்டு வந்த மத்திய அரசுக்கு EPS வரவேற்பு தெரிவித்துள்ளார். மாற்றத்தை ஏற்படுத்தும் சீர்திருத்தத்துடனும், தொலை நோக்கு பார்வையுடனும் PM மோடி கொண்டு வந்த மாற்றத்துக்கு பாராட்டுகள் என EPS பதிவிட்டுள்ளார். அத்தியாவசிய பொருட்களின் வரி மாற்றம் முன்னேற்றத்தை உறுதி செய்யும் எனவும் EPS குறிப்பிட்டுள்ளார். வரி குறைப்பால், மக்களின் நம்பிக்கை அதிகரிக்கும் எனவும் கூறியுள்ளார்.
News September 4, 2025
BREAKING: கிரிக்கெட்டில் இருந்து இந்திய வீரர் ஓய்வு

சுழற்பந்து வீச்சில் தனக்கென தனி இடம் பிடித்த அமித் மிஸ்ரா அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 42 வயதாகும் அமித் மிஸ்ரா, இதுவரை 22 டெஸ்ட், 36 ODI மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி 156 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அமித் மிஸ்ரா டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட IPL அணிகளிலும் விளையாடி விக்கெட்களை குவித்துள்ளார்.