News March 23, 2025
புதிய பாம்பன் பாலம்: PM மோடி திறந்து வைப்பார்

பாம்பன் புதிய ரயில் பாலம் 2 வாரத்தில் திறக்கப்படும் என தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் கூறியுள்ளார். இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார் எனவும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். புதிய பாலம் திறக்கப்பட்ட பிறகே ராமேஸ்வரம் ரயில் நிலைய பணிகள் நிறைவடையும் என்றும், பழைய பாலத்தை அகற்றுவது குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News November 22, 2025
ராசிபுரம் அருகே பொது கழிவறையில் கேமரா!

ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூரைச் சேர்ந்த நாகராஜ் (27) ஆண்டகலூர் கேட் டீக்கடையில் வேலை செய்தார். இந்நிலையில் நேற்று காம்ப்ளெக்ஸ் பொதுக் கழிப்பறையில் பெண்களை ஒளிவு மறைவாக வீடியோ எடுக்க தனது மொபைல் கேமரா ஆன் செய்த நிலையில் வைத்து விட்டார். கழிப்பறைக்கு வந்த பெண் அதை கண்டுபிடித்து புகார் செய்தார். விசாரணையில் குற்றம் உறுதியானதால், ராசிபுரம் அனைத்து மகளிர் போலீசார் நாகராஜை கைது செய்தனர்.
News November 22, 2025
இனி ஓராண்டு வேலை செய்தாலே Gratuity!

ஊழியர் ஒருவர் ஒரு நிறுவனத்தில் தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் வேலை செய்தால், அவருக்கு Gratuity எனும் சிறப்பு பணத்தொகுப்பு வழங்கப்படும். இந்த விதியை மத்திய தொழிலாளர் அமைச்சகம் மாற்றியுள்ளது. அதன்படி, ஊழியர் ஓராண்டு வேலை செய்தாலே Gratuity வழங்கப்பட வேண்டும் என்ற விதி கொண்டு வரப்பட்டுள்ளது. இது புலம்பெயர் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் என அனைவருக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 22, 2025
BREAKING: திமுகவில் இருந்து நீக்கம்

திருவள்ளூர் தொகுதி திமுக MLA வி.ஜி.ராஜேந்திரனின் உதவியாளரும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளருமான VS நேதாஜி திமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சாலை அமைப்பது உள்ளிட்ட அரசு ஒப்பந்தப் பணிகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்த நிலையில், கட்சியிலிருந்து நீக்கி துரைமுருகன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.


