News March 23, 2025
புதிய பாம்பன் பாலம்: PM மோடி திறந்து வைப்பார்

பாம்பன் புதிய ரயில் பாலம் 2 வாரத்தில் திறக்கப்படும் என தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் கூறியுள்ளார். இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார் எனவும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். புதிய பாலம் திறக்கப்பட்ட பிறகே ராமேஸ்வரம் ரயில் நிலைய பணிகள் நிறைவடையும் என்றும், பழைய பாலத்தை அகற்றுவது குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News September 15, 2025
தமிழகம் முழுவதும் விலை குறைகிறது

TN வளர்ச்சிக்கான GST சீர்திருத்தங்கள் குறித்த GST 2.O புத்தகத்தை நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். டிராக்டருக்கு ₹42,000 வரையும், ₹1 லட்சம் மதிப்பிலான டூவிலருக்கு ₹10,000 வரையும், ஆட்டோக்களுக்கு ₹30,000 வரையும் சேமிக்கலாம். குறிப்பேடுகள் ரப்பர், பென்சில், கிரெயான்ஸ் போன்றவற்றில் ₹850 வரை பெற்றோரால் சேமிக்க முடியும். TV-க்கு ₹4,000, AC-க்கு ₹3,500, ஹீட்டருக்கு ₹7,000 வரையும் விலை குறையும்.
News September 15, 2025
அதிமுகவின் DNA சி.என்.அண்ணாதுரை: EPS

அண்ணாவின் 117-வது பிறந்தநாளையொட்டி, ‘அண்ணா என்றால் தமிழ்நாடு, தமிழ், திராவிடம்’ என EPS தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அண்ணாவை பெயரில் மட்டுமல்லாமல், கொள்கை, செயல், அரசியல் அறத்தில் 53 ஆண்டுகளாக ADMK பெருமையோடு ஏந்தி நிற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், சாமானியர்களை அரியணை ஏற்றும் திராவிட அரசியலில் ஈடு இணையற்ற தலைமகனின் பிறந்தநாளில் குடும்ப ஆட்சியை அகற்ற உறுதியேற்க அழைப்பு விடுத்துள்ளார்.
News September 15, 2025
கன்னி பேச்சு மூலம் கவனம் ஈர்த்த ராமதாஸ் மகள்

ஓசூரில் நேற்று நடைபெற்ற பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் ராமதாஸ் மகள் காந்திமதி முதல்முறையாக உரையாற்றியுள்ளார். எனது தந்தை ராமதாஸ் துணிச்சலுக்கும், தியாகத்துக்கும் உதாரணமானவர். அவருக்கு துணையாக நிற்பது எனது கடமை. அவரது தலைமையிலும், வழிகாட்டுதலிலும் பாமக மாபெரும் சக்தியாக மாறியுள்ளது. ராமதாஸின் ஒற்றைத் தலைமையை ஏற்று, ஒற்றுமையுடன் தொடர்ந்து போராடுவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.