News March 23, 2025

புதிய பாம்பன் பாலம்: PM மோடி திறந்து வைப்பார்

image

பாம்பன் புதிய ரயில் பாலம் 2 வாரத்தில் திறக்கப்படும் என தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் கூறியுள்ளார். இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார் எனவும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். புதிய பாலம் திறக்கப்பட்ட பிறகே ராமேஸ்வரம் ரயில் நிலைய பணிகள் நிறைவடையும் என்றும், பழைய பாலத்தை அகற்றுவது குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

Similar News

News October 15, 2025

இந்த 3 இருமல் மருந்தை குடிக்காதீங்க.. எச்சரிக்கை

image

கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை குடித்து 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்படும் Coldrif, Respifresh TR, ReLife ஆகிய இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என WHO எச்சரித்துள்ளது. தரமற்ற இருமல் மருந்துகளை பயன்படுத்தி எதிர்பாராத பக்க விளைவுகளை சந்தித்திருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவும் அறிவுறுத்தியுள்ளது.

News October 15, 2025

விசாவுக்கான ஆங்கில தேர்வை கடுமையாக்கும் பிரிட்டன்

image

இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து விசா கோரி விண்ணப்பிப்போருக்கான ஆங்கில மொழியறிவு தேர்வை கடினமாக்குவதற்கான மசோதா பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தாக்கலாகியது. பிரிட்டனுக்கு வருவோர், அங்குள்ள 12-ம் வகுப்பிற்கு இணையான ஆங்கில மொழித்திறன் பெற்றிருக்க வேண்டும் என்று மசோதா கூறுகிறது. அவ்வாறு இருந்தால் தான் தங்களது நாட்டின் வளர்ச்சிக்கு அவர்களால் பங்களிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 15, 2025

பசுமை பட்டாசுகளை விற்க அனுமதி

image

காற்று மாசுபாட்டால் மூச்சு முட்டும் டெல்லியில், 5 ஆண்டுகள் கழித்து தீபாவளிக்கு வெடி சத்தம் கேட்கவுள்ளது. வரும் தீபாவளிக்கு, டெல்லியில் பசுமை பட்டாசுகளை வெடிக்க SC அனுமதியளித்துள்ளது. அதன்படி, அக்.18-ம் தேதி முதல் அக்.21-ம் தேதி வரை மாலை 6 – இரவு 10 மணி வரை வெடித்துக்கொள்ளலாம். மேலும், அனுமதிக்கப்பட்ட பட்டாசு கடைகளில் மட்டுமே பசுமை பட்டாசுகளை விற்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!