News August 2, 2024

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் புதிய உத்தரவு

image

துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் சொத்துகளை கணக்கிட வேண்டும் என்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், துப்பாக்கிச்சூட்டை ஏற்க முடியாது என்றும், இதில் தொடர்புடைய அதிகாரிகளின் சொத்துகள் பற்றி விசாரிக்கவும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தற்போது சொத்துகளைக் கணக்கிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 22, 2026

திமுகவில் போட்டியிடவில்லை: நடிகர் SV சேகர் அறிவித்தார்

image

திமுகவுக்கு ஆதரவாக பேசிவரும் நடிகர் SV சேகர், மயிலாப்பூர் தொகுதியில் களமிறங்க முயல்வதாக வெளியான தகவலை மறுத்துள்ளார். இது தொடர்பாக தனது X பக்கத்தில், தேர்தல் அரசியலிலிருந்து 15 ஆண்டுகளுக்கு முன்பும், பாஜகவிலிருந்து 3 ஆண்டுகளுக்கு முன்பும் விலகி விட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், வரும் தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக பிரசாரம் செய்வதோடு, CM ஸ்டாலினுக்கு துணை நிற்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

News January 22, 2026

ஒரு பெண்ணுக்கு 11 குழந்தைகள் பிறந்தன ❤️❤️

image

நவீன காலத்தில் பெண்கள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்வதே அரிது. ஹரியானாவில் 1 பெண் 11 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்ட தம்பதிக்கு முதல் பத்தும் பெண் குழந்தைகளாகவே பிறந்ததாம். 19 ஆண்டுகால காத்திருப்புக்கு பின், 11-வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாய்க்கு ரத்த சோகை இருந்ததால், ஆபத்தான முறையில் பிரசவம் பார்த்தாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

News January 22, 2026

ஆஸ்கர் ரேஸில் இடம்பெறாத ‘ஹோம்பவுண்ட்’

image

98-வது ஆஸ்கர் விருதுகள் இறுதிப்பட்டியலில் ‘ஹோம்பவுண்ட்’ இடம்பெறவில்லை. சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் இந்தியா பரிந்துரைத்த ‘ஹோம்பவுண்ட்’-க்கு விருது கிடைக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அடிக்கடி ஜாதி, மத மோதல் நடக்கும் இடத்திலிருந்து தப்பிக்கும் நண்பர்கள் இருவர், சமூகத்தில் உரிய அந்தஸ்து பெற காவலர் தேர்வு எழுதுகின்றனர். அதில், வெற்றி அடைந்தனரா என்பதே ‘ஹோம்பவுண்ட்’.

error: Content is protected !!