News August 2, 2024
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் புதிய உத்தரவு

துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் சொத்துகளை கணக்கிட வேண்டும் என்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், துப்பாக்கிச்சூட்டை ஏற்க முடியாது என்றும், இதில் தொடர்புடைய அதிகாரிகளின் சொத்துகள் பற்றி விசாரிக்கவும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தற்போது சொத்துகளைக் கணக்கிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 30, 2025
தவெகவுக்கும் பாஜகவுக்கும் என்ன வித்தியாசம்? வானதி

தவெக கொள்கைக்கும், பாஜக கொள்கைக்கும் என்ன வித்தியாசமென்று விஜய் தெளிவாக சொல்லவேண்டும் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். அதையே இதுவரை சொல்லவில்லை என்ற அவர், விஜய் சினிமா வசனங்களை பேசுவதை போல நாங்களும் பேசமுடியுமா எனவும் கேட்டுள்ளார். மேலும், எந்த வகையில் பாஜக தனக்கு எதிரி என்று விஜய் சொல்லாதவரை, நாங்கள் ஏன் அவரை விமர்சிக்க வேண்டும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News December 30, 2025
இந்திய அணியில் இணைவாரா ஸ்ரேயாஸ் ஐயர்?

ஜன.11-ல் துவங்க உள்ள நியூசிலாந்து தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் பங்கேற்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. காயத்தில் இருந்து குணமடைந்து வரும் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியில் எப்போது இணைவார் என அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது தொடர்பாக பேசிய MCA அதிகாரி ஒருவர், ஸ்ரேயாஸ் தற்போது நலமாக உள்ளார். NZ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் விளையாடுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
News December 30, 2025
அஜித் படத்துக்கு தயாரிப்பாளர் கிடைக்கலையா?

‘குட் பேட் அக்லி’ பட வெற்றிக்கு பிறகு மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிக்கவுள்ளார். ஆனால், இந்த படத்திற்கு ₹300+ கோடி பட்ஜெட் தேவைப்படுவதாக கூறப்படும் நிலையில், இன்னும் தயாரிப்பாளர் கிடைக்கவில்லையாம். ‘குட் பேட் அக்லி’ ₹250+ கோடிக்கும் மேல் வசூலித்திருந்தாலும், இது பெரிய பட்ஜெட் என்பதால், தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்களாம். பொறுத்திருந்து பார்ப்போம்!


