News August 2, 2024
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் புதிய உத்தரவு

துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் சொத்துகளை கணக்கிட வேண்டும் என்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், துப்பாக்கிச்சூட்டை ஏற்க முடியாது என்றும், இதில் தொடர்புடைய அதிகாரிகளின் சொத்துகள் பற்றி விசாரிக்கவும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தற்போது சொத்துகளைக் கணக்கிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 3, 2025
இரும்பு கை மாயாவியாகும் அல்லு அர்ஜுன்!

‘கூலி’ படத்தின் ரிசல்ட் லோகேஷ் கனகராஜை இக்கட்டான சூழலுக்கு தள்ளியுள்ளது. அவரின் இரும்பு கை மாயாவி கதையில் நடிக்க, சூர்யா & ஆமிர்கான் ஆகியோர் மறுத்துவிட்டதாக கூறும் நிலையில், படம் குறித்து புது செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. இதே கதையை லோகேஷ், அல்லு அர்ஜுனிடம் கூறிய நிலையில், அவர் நடிக்க சம்மதித்து விட்டாராம். DC & கைதி 2 படங்களை முடித்துவிட்டு விரைவில் லோகேஷ் இப்படத்தில் இறங்குவாராம்.
News December 3, 2025
BREAKING: கொந்தளித்தார் விஜய்

சென்னை உள்ளிட்ட நகரங்களில் மழைநீர் வடிகால் பணிகளை முறையாக செய்யாததால் கொஞ்சமாக பெய்த மழைக்கே மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளதாக விஜய் விமர்சனம் செய்துள்ளார். மீதமுள்ள காலத்திலாவது மக்கள் சிரமத்திற்கு ஆளாகாதவாறு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தவெகவினர் களத்திற்கு சென்று உதவி செய்யவும் அறிவுறுத்தியுள்ளார்.
News December 3, 2025
BREAKING: அமித்ஷாவை சந்தித்தார் ஓபிஎஸ்

டெல்லி விரைந்துள்ள ஓபிஎஸ், சற்றுமுன் அமித்ஷாவை சந்தித்து பேசிவருகிறார். NDA கூட்டணியில் இருந்து விலகிய பிறகு, அமித்ஷாவை ஓபிஎஸ் சந்திப்பது இதுவே முதல்முறை. அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவை கட்சியாக பதிவு செய்து, NDA கூட்டணியில் இடம்பெறுவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக தெரிகிறது. இன்னும் சற்றுநேரத்தில் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்திக்க வாய்ப்புள்ளது.


