News August 2, 2024
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் புதிய உத்தரவு

துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் சொத்துகளை கணக்கிட வேண்டும் என்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், துப்பாக்கிச்சூட்டை ஏற்க முடியாது என்றும், இதில் தொடர்புடைய அதிகாரிகளின் சொத்துகள் பற்றி விசாரிக்கவும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தற்போது சொத்துகளைக் கணக்கிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 22, 2025
மந்த நிலையில் சர்வதேச தங்கம் விலை!

சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் மந்த நிலை நீடிக்கிறது. கடந்த 30 நாள்களில் 1 அவுன்ஸ்(28g) $68(1.67%) சரிந்துள்ளது. இதனால் தான் நம்மூரில், இம்மாதம் தங்கம் விலையில் பெரிய மாற்றமின்றி, ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது. இதனிடையே, இன்று(நவ.22) பெரிய அளவில் மாற்றமின்றி 1 அவுன்ஸ் $4,065-க்கும், வெள்ளி $0.55 குறைந்து $50-க்கும் விற்பனையாகிறது. இது நம்மூர் சந்தையிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.
News November 22, 2025
ச்சீ! கட்சி பெயரை கூட திருடி வைத்துள்ளார்கள்: துரை

2024-ல் கே.பி.சரவணன் என்பவர் தொடங்கிய ‘திராவிட வெற்றிக்கழகம்’ பெயரில், மல்லை சத்யாவும் புதிய கட்சியை தொடங்கியது சர்ச்சையாகியுள்ளது. இதுதொடர்பான கேள்விக்கு துரை வைகோ, தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை; ஆரம்பிக்கும் போதே திருட்டுப் பழக்கத்தில் ஆரம்பித்தால் கடைசி வரை திருட்டுப் பழக்கம் இருக்கத்தான் செய்யும். அப்படித்தான் கட்சி பெயரைக்கூட இன்னொரு கட்சியிடம் களவாடி வைத்துள்ளனர் என காட்டமாக விமர்சித்தார்.
News November 22, 2025
காலையிலேயே பரபரப்பான சென்னை.. துப்பாக்கிச்சூடு

சென்னையில் இளைஞர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி விஜயகுமாரை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர். சென்னை இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே நண்பர்களுடன் பதுங்கியிருந்த விஜயகுமாரை கைது செய்ய சென்றபோது, போலீசாரை தாக்கியுள்ளனர். இதனையடுத்து தற்காப்புக்காக விஜயகுமாரை காலில் சுட்டுப்பிடித்த போலீசார், அவரின் கூட்டணியான கவுதம், நிரஞ்சன் ஆகியோரையும் கைது செய்துள்ளனர்.


