News August 2, 2024
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் புதிய உத்தரவு

துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் சொத்துகளை கணக்கிட வேண்டும் என்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், துப்பாக்கிச்சூட்டை ஏற்க முடியாது என்றும், இதில் தொடர்புடைய அதிகாரிகளின் சொத்துகள் பற்றி விசாரிக்கவும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தற்போது சொத்துகளைக் கணக்கிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 14, 2025
பிஹார் தேர்தல் முடிவுகள் அதிர்ச்சி அளிக்கிறது: ராகுல்

பிஹார் தேர்தல் முடிவுகள் அதிர்ச்சி அளிப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். MGB கூட்டணிக்கு வாக்களித்த லட்சக்கணக்கான மக்களுக்கு நன்றி என X-ல் அவர் பதிவிட்டுள்ளார். தொடக்கத்தில் இருந்தே நியாயமாக நடக்காத இந்த தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை என்றும், தோல்விக்கான காரணம் ஆராயப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு கடுமையாக முயற்சிப்போம் என்றும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.
News November 14, 2025
BREAKING: நடிகர் அஜித்குமார் இணைந்தார்

ரிலையன்ஸின் எனர்ஜி ட்ரிங்க் பிராண்டான CAMPA எனர்ஜியுடன்(RCPL) இணைந்திருப்பதை AK ரேஸிங் அணி அறிவித்துள்ளது. அஜித் போட்டோவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட AK ரேஸிங் அணி, இது ஆரம்பம்தான் எனத் தெரிவித்துள்ளது. தங்களது நோக்கத்தை பகிர்ந்து கொண்டதற்கு RCPL-க்கு நன்றி தெரிவிப்பதாகவும், இந்த பார்ட்னர்ஷிப் இந்தியன் மோட்டார் ஸ்போர்ட்டை உலகளவில் எடுத்துச் செல்லும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
News November 14, 2025
புத்திசாலி கிளிகளின் இந்த குணங்கள் தெரியுமா?

பூமியில் வாழும் உயிரினங்களில், கிளிகள் மனிதர்களை ஆச்சரியப்படுத்தும் திறன்கள் கொண்டவை. மனிதர்களுடன் நெருக்கமான பந்தம், கிளிகளின் ஆழமான உணர்ச்சி மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவை நம்மை வியப்படைய செய்கிறது. கிளிகள் குறித்து சில அழகான தகவல்களை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உங்களுக்கும் கிளிகள் பிடிக்கும் என்றால் SHARE பண்ணுங்க.


