News August 2, 2024

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் புதிய உத்தரவு

image

துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் சொத்துகளை கணக்கிட வேண்டும் என்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், துப்பாக்கிச்சூட்டை ஏற்க முடியாது என்றும், இதில் தொடர்புடைய அதிகாரிகளின் சொத்துகள் பற்றி விசாரிக்கவும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தற்போது சொத்துகளைக் கணக்கிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 7, 2025

உங்க சொத்து மதிப்பு என்ன? தெரிஞ்சுக்க swipe

image

உலகம் முழுவதும் பிரபல தொழிலதிபர்களின் நிகர சொத்து (Net Worth) குறித்து அறிந்திருப்போம். அதேபோல், நீங்களும் உங்கள் நிகர சொத்தை அறிந்து கொள்ள விரும்புகிறீர்களா? மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் பண்ணுங்க. அதில் உள்ள வழிகளை பின்பற்றி எளிதாக உங்கள் நிகர சொத்தை கணக்கிடுங்க. இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News November 7, 2025

கல்யாண வேலையில் பிஸியான ரஷ்மிகா

image

விஜய் தேவரகொண்டா – ரஷ்மிகா மந்தனா 2026-ல் திருமணம் செய்துகொள்ளப் போவதாக கூறப்படுகிறது. ஜெய்ப்பூரில் இருவரும் திருமணம் செய்ய முடிவெடித்துள்ளார்களாம். இதனால், சரியான இடத்தை தேர்வு செய்ய, ரஷ்மிகா 3 நாள் பயணமாக ஜெய்ப்பூர் சென்றுள்ளாராம். அங்குள்ள அனைத்து பிரபல மண்டபங்கள், ரிசார்ட்டுகளை ஆய்வு செய்து வருகிறாராம். விரைவில் இடம் இறுதிசெய்யப்படும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News November 7, 2025

டிஜிபி நியமன விவகாரம்: TN அரசுக்கு SC நோட்டீஸ்

image

தமிழகத்தில் டிஜிபியை நியமனம் செய்யாமல், பொறுப்பு டிஜிபியை நியமித்ததை எதிர்த்து, வழக்கறிஞர் ஹென்றி திபேன் வழக்கு தொடர்ந்தார். இதில் உடனடியாக டிஜிபியை நியமிக்க வேண்டும் என SC உத்தரவிட்டிருந்தது. ஆனால் அதனை தமிழக அரசு நிறைவேற்றாததால், கோர்ட் அவமதிப்பு வழக்கு ஒன்றை கிஷோர் கிருஷ்ணசாமி என்பவர் தொடர்ந்தார். இதை விசாரித்த SC 3 வாரங்களில் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

error: Content is protected !!