News August 2, 2024
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் புதிய உத்தரவு

துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் சொத்துகளை கணக்கிட வேண்டும் என்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், துப்பாக்கிச்சூட்டை ஏற்க முடியாது என்றும், இதில் தொடர்புடைய அதிகாரிகளின் சொத்துகள் பற்றி விசாரிக்கவும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தற்போது சொத்துகளைக் கணக்கிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 14, 2025
லிப் பாம் போடுவீங்களா? இத கண்டிப்பா கவனிங்க!

உதடுகளை பராமரிக்க பயன்படுத்தும் லிப் பாமை வாங்கும்போது, இந்த விஷயங்களை கவனிக்க வேண்டியது அவசியம் எனக் கூறுகின்றனர் நிபுணர்கள். *உதடுகளை வறட்சியில் இருந்து பாதுகாக்கும் தேங்காய் எண்ணெய், ஷியா பட்டர் உள்ளதா என பார்க்க வேண்டும் *SPF இருக்கிறதா என்பதை சரிபார்த்து வாங்கவும் *செயற்கை வாசனை மற்றும் ரசாயனங்கள் சேர்க்கப்பட்டிருந்தால் அதை வாங்க வேண்டாம் *நீண்ட நேரம் நீடிக்கும் லிப் பாமை வாங்குங்கள். SHARE
News December 14, 2025
அமெரிக்காவில் ஓயாத துப்பாக்கிச்சத்தம்!

கடந்த வாரம் தான் USA-வின் கென்டக்கி பல்கலை.,யில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு மாணவர் கொல்லப்பட்டார். இந்நிலையில், ரோட் தீவில் உள்ள பிரவுன் பல்கலை.,யில் மற்றொரு துப்பாக்கிச்சூடு நிகழ்ந்துள்ளது. இதில் 2 பேர் கொல்லப்பட்ட நிலையில், 8 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் இன்னும் பிடிபடாததால், மேலும் துப்பாக்கிச்சூடு நடக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
News December 14, 2025
BREAKING: விலை சரசரவென்று குறைந்தது

வார விடுமுறை நாளான இன்று சிக்கன் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கொள்முதல் பண்ணைகளில் (நாமக்கல்) கோழிக்கறி விலை Kg-க்கு ₹5 குறைந்துள்ளது. இதன்படி, கறிக்கோழி Kg (உயிருடன்) ₹114-க்கும், முட்டைக்கோழி ₹100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.6.20 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 55 ஆண்டுகால பண்ணை வரலாற்றில் இதுவே அதிகபட்ச கொள்முதல் விலை.


