News August 2, 2024
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் புதிய உத்தரவு

துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் சொத்துகளை கணக்கிட வேண்டும் என்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், துப்பாக்கிச்சூட்டை ஏற்க முடியாது என்றும், இதில் தொடர்புடைய அதிகாரிகளின் சொத்துகள் பற்றி விசாரிக்கவும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தற்போது சொத்துகளைக் கணக்கிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 24, 2025
டிகிரியை வைத்து ஒன்றும் செய்திட முடியாது: கமல்

திருச்சியில் PEFI & கமல் பண்பாட்டு மையம் விருது நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய கமல்ஹாசன், விளையாட்டிலும், சினிமா தியேட்டரிலும் தான் சாதி ஒழிந்துள்ளது என்றார். விளையாட்டு வீரர்களும், இளைஞர்களும் அரசியலுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். வெறும் டிகிரியை வைத்து ஒன்றும் செய்துவிட முடியாது என்ற கமல், அரசியல் விளையாட்டையும் ஆடிப் பார்க்க வேண்டும் என கூறினார்.
News December 24, 2025
தேர்தலில் ஒதுங்கியிருக்க மாட்டேன்: சசிகலா

கடந்த காலங்களில் சிலர் செய்த தவறின் காரணமாகவே திமுக ஆட்சிக்கு வந்துள்ளது என்று சசிகலா கூறியுள்ளார். சட்டப்பேரவை தேர்தல் பணிகள் தொடர்பாக நாள்தோறும் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறிய அவர், 2026 தேர்தலில் நிச்சயம் ஒதுங்கியிருக்க மாட்டேன் என்றும் உறுதிப்பட தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நிச்சயம் அடுத்த ஆண்டு ஆட்சி மாற்றம் வரும் என்றும் சசிகலா கூறியுள்ளார்.
News December 24, 2025
லாவோட்சு பொன்மொழிகள்

*நீ யாரிடம் உன் ரகசியங்களை சொல்கிறாயோ, அவரிடம் உன் சுதந்திரத்தை இழப்பாய்.
*மற்றவர்களை அடக்கி ஆளுதல் வலிமை, உங்களை அடக்கி ஆளுதலே உண்மையான சக்தி.
* கடினமான விஷயங்களை, அவை எளிதானதாக இருக்கும்போது செய்யுங்கள். மிகப்பெரிய விஷயங்களை, அவை சிறியதாக இருக்கும்போது செய்யுங்கள்.
*ஆயிரம் மைல்களுக்கான பயணம் ஒரு அடியிலேயே தொடங்குகின்றன.


