News August 2, 2024
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் புதிய உத்தரவு

துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் சொத்துகளை கணக்கிட வேண்டும் என்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், துப்பாக்கிச்சூட்டை ஏற்க முடியாது என்றும், இதில் தொடர்புடைய அதிகாரிகளின் சொத்துகள் பற்றி விசாரிக்கவும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தற்போது சொத்துகளைக் கணக்கிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 27, 2025
தருமபுரி: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News December 27, 2025
அத்தைக்கு மீசை முளைக்கட்டும்: சேகர்பாபு

பாஜக ஆட்சிக்கு வந்தால் அறநிலையத்துறை கலைக்கப்படும் என H.ராஜா தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, ‘அத்தைக்கு மீளை முளைத்தால் தான் அவர் சித்தப்பா; முதலில் அவரை ஒரு தொகுதியில் நின்று வெல்ல சொல்லுங்கள்’ என்று குறிப்பிட்டார். H.ராஜாவுக்கு எதிராக திமுக சாதாரண தொண்டனை நிறுத்தி மண்ணை கவ்வ வைக்கும் என்றும் கூறினார். பாஜக அவரை கண்டுகொள்ளாததால் இப்படி பேசிவருவதாகவும் தெரிவித்தார்.
News December 27, 2025
VHT-ல் விராட், ரோஹித் பெறும் சம்பளம் இதுதான்

விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற நட்சத்திர வீரர்கள் விளையாடுவதால் நடப்பு விஜய் ஹசாரே கோப்பை(VHT) வழக்கத்தைவிட கூடுதல் கவனம் பெற்றுள்ளது. சர்வதேச போட்டிகளுக்கு கோடிகளில் சம்பளம் வாங்கும் இருவருக்கும் இங்கு எவ்வளவு கிடைக்கும் என்ற கேள்வி பலருக்கும் இருக்கலாம். VHT பொறுத்தவரை சீனியர் வீரர்களுக்கு ஒரு போட்டிக்கு ₹60,000, மிட் லெவல் பிரிவுக்கு ₹50,000, ஜூனியருக்கு ₹40,000 என வகைப்படுத்தப்பட்டுள்ளது.


