News May 7, 2025
தேசிய பாதுகாப்பு குழுவுக்கு புதிய அதிகாரிகள் நியமனம்!

தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் தலைவராக அலோக் ஜோஷியை மத்திய அரசு நியமித்துள்ளது. ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக முன்னாள் விமானப்படை, தரைப்படை, கடற்படை அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுக்க தயாராகி வருவதாக கூறப்படும் நிலையில், இந்த அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
Similar News
News October 25, 2025
பணம் டெபாசிட் செய்யும்போது இதை மறந்துடாதீங்க

*ஒரு நாளுக்கு ₹50,000-க்கு மேல் டெபாசிட் செய்தால் பான் கார்டு விவரம் கட்டாயம்.
*Savings Account-ல் ஆண்டுக்கு ₹10 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால், வங்கி தரப்பில் IT-க்கு தெரிவிக்கப்படும்.
*Current Account-ல் ஆண்டுக்கு ₹50 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால், வங்கி தரப்பில் IT-க்கு தெரிவிக்கப்படும்.
*இந்த டெபாசிட்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லையென்றால் சிக்கல் ஏற்படும். ஷேர் பண்ணுங்க
News October 25, 2025
BREAKING: புயல் கரையை கடக்கும் இடம் அறிவிப்பு

ஆந்திராவின் காக்கிநாடா அருகே மச்சிலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினத்துக்கு இடையே அக்.28 மாலை அல்லது இரவில் Montha புயல் கரையை கடக்கும் என IMD அறிவித்துள்ளது. இன்று இரவு முதலே கடலில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும், புயல் கரையை கடக்கும்போது அதிகபட்சம் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. ஆந்திராவில் புயல் கரையை கடந்தாலும் தமிழகத்தில் மழை பெய்யும் எனவும் கணித்துள்ளது.
News October 25, 2025
இந்தியாவின் மிக பணக்கார ஸ்கூல்கள் இவைதான்!

கல்வியும், மருத்துவமும் நாட்டில் இலவசம் என்றாலும், குழந்தைகளின் கல்வித்தரத்தை மேம்படுத்த பெற்றோர்கள் பெரும் பணத்தை செலவு செய்கின்றனர். அந்த வகையில், 2025 – 26 ஆண்டு கல்வி கட்டணத்தின் அடிப்படையில் நாட்டில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஸ்கூல்களின் பட்டியலை மேலே கொடுத்துள்ளோம். அவை என்னென்ன என அறிய போட்டோவை வலது பக்கமாக Swipe பண்ணி பாருங்க.


