News May 7, 2025
தேசிய பாதுகாப்பு குழுவுக்கு புதிய அதிகாரிகள் நியமனம்!

தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் தலைவராக அலோக் ஜோஷியை மத்திய அரசு நியமித்துள்ளது. ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக முன்னாள் விமானப்படை, தரைப்படை, கடற்படை அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுக்க தயாராகி வருவதாக கூறப்படும் நிலையில், இந்த அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
Similar News
News November 22, 2025
பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்

கடலூர் மாவட்ட பாஜக விவசாய அணி துணைத் தலைவர் செல்வராசு, அமைச்சர் கணேசன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். மேலும், அவரது ஆதரவாளர்கள் சுமார் 100 பேரும் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். கடந்த சில தினங்களாக தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் <<18345411>>மாற்றுக் கட்சியினர்<<>> பலரும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இதனால், திமுகவும் மாற்றுக் கட்சியினரை இணைக்கும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது.
News November 22, 2025
ஏ.ஆர்.ரகுமான் விவாகரத்துக்கு இதுதான் காரணமா?

எங்கு போனாலும் ரசிகர்களால் பிரைவசி இல்லை என்பதால் அதன் தாக்கம் குடும்பத்தின் மேல் விழுந்துள்ளதாக ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார். சிறு வயதிலிருந்தே குழந்தைகளுடன் தனிப்பட்ட நேரத்தை செலவிடமுடியாமல் இருந்ததாக கூறிய அவர், குடும்பமாக ஒன்று கூடுவதும், ஒரே டேபிளில் உட்கார்ந்து உணவருந்துவதும் மிகக் குறைவு என கூறிவுள்ளார். இந்நிலையில், இதனால்தான் அவருக்கு விவாகரத்து ஆனதா என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.
News November 22, 2025
உக்ரைனை மிரட்டும் அமெரிக்கா

ரஷ்ய போர் நிறுத்தத்திற்கு தாங்கள் முன்மொழிந்துள்ள நிபந்தனைகளுக்கு இணங்குமாறு உக்ரைனை USA மிரட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இணங்க மறுத்தால் ஆயுதங்கள், உளவு தகவல்கள் பகிர்வது நிறுத்தப்படும் என எச்சரிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தங்களை கலந்து ஆலோசிக்காமல், இந்த ஒப்பந்தம் முன்மொழியப்பட்டுள்ளதாக உக்ரைன் குற்றஞ்சாட்டி வருகிறது. USA நிபந்தனைகளின் படி, உக்ரைன் சில பகுதிகளை இழக்க நேரிடும்.


