News August 3, 2024

புதிய தேசிய கிரிக்கெட் அகாடமி விரைவில் திறப்பு

image

பெங்களூருவில் அமைக்கப்பட்டுள்ள பிசிசிஐ-யின் புதிய தேசிய கிரிக்கெட் அகாடமி (NCA) விரைவில் திறக்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். கிரிக்கெட் மைதானங்கள் மற்றும் பயிற்சி ஆடுகளங்களின் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். புதிய NCA-வில் உலகத்தரம் வாய்ந்த 3 மைதானங்கள், 45 பயிற்சி ஆடுகளங்கள், உட்புற ஆடுகளங்கள் என பல்வேறு அதி நவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன.

Similar News

News November 7, 2025

அதுல்யா அணிந்தால் இலைகளும் மலரும்..!

image

‘காதல் கண் கட்டுதே’ திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை அதுல்யா ரவி, தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். SM-யில் மிகவும் ஆக்டிவாக இருப்பதன் மூலம், அதுல்யாவுக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் சமீபத்தில், இன்ஸ்டாவில் வெளியிட்ட போட்டோஸ், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதில், இலைகளை போர்த்திய பச்சை வண்ணமாய் மின்னுகிறார். உங்களுக்கும் இந்த போட்டோஸ் பிடிச்சிருந்தா, லைக் போடுங்க.

News November 7, 2025

BREAKING: கேரளாவுக்கு ஆம்னி பஸ்கள் செல்லாது

image

கேரளாவிற்கு இன்று சென்ற 30-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்களை அம்மாநில போலீசார் சிறைபிடித்தனர்.
மேலும் சிறைபிடிக்கப்பட்ட பஸ்களுக்கு ₹70 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதை கண்டித்து இன்று இரவு முதல் கேரளாவிற்கு ஆம்னி பஸ்களை இயக்குவதில்லை என்ற முடிவை பஸ் உரிமையாளர் எடுத்துள்ளனர்.

News November 7, 2025

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை… கலெக்டர் அறிவிப்பு

image

<<18228875>>சென்னையை<<>> தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்திலும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மழை விடுமுறையை ஈடுசெய்ய நாளை பள்ளிகள் இயங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், நாளை(நவ.8) பள்ளிகள் செயல்படாது என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் விடுமுறை அறிவிப்பு வெளியாகலாம்.

error: Content is protected !!