News September 22, 2024
நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி: RMC

வங்கக்கடல் பகுதியில் நாளை காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக நாளை(செப்.23) புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகக்கூடும் எனவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் RMC கூறியுள்ளது.
Similar News
News August 10, 2025
MGRஐ மீண்டும் தாக்கிய விசிக

MGR குறித்து பேசிய திருமா அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார் என்று இபிஎஸ் விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த வன்னி அரசு, வெறுமனே கருணாநிதி வெறுப்பு மற்றும் தனக்கிருந்த சினிமா புகழை மட்டும் வைத்து ஆட்சியை பிடித்தவர் <<17349030>>MGR<<>>. மற்றபடி அவருக்கு எந்த கோட்பாட்டு பின்னணியும் இல்லை. இன்னும் உரத்துச் சொல்வோம் எம்ஜிஆரை உருவாக்கியதே பார்ப்பனியக் கும்பல்தான் என்று பதிலடி கொடுத்துள்ளார்.
News August 10, 2025
அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. அதன்படி, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, நெல்லை, குமரி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கோவை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.
News August 10, 2025
அமைச்சரின் பேச்சால் தூய்மை பணியாளர்கள் அதிருப்தி

‘பணி நிரந்தரம்’ செய்யக்கோரி, தூய்மைப்பணியாளர்கள் தலைநகரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் அமைச்சர் சேகர்பாபு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. இதன்பின் அவர், ‘பணி நிரந்தரம் தரோம்னு நாங்க எதுவும் வாக்குறுதி கொடுக்கவில்லையே என பேசியிருந்தார். அதேபோல், பேச்சுவார்த்தையின்போது அவர் பேசிய சில விஷயங்களும் போராட்டக்குழுவை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.