News February 23, 2025
டிஜிட்டல் தளங்களுக்கு புதிய சட்டம்?

யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில் புதிய சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஆபாச வீடியோக்கள் மற்றும் அவதூறு செய்திகள் கட்டுப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. தற்போது உள்ள சட்டங்கள் குறித்தும், புதிய சட்டங்களின் தேவை குறித்தும் ஆய்வு செய்து வருவதாக மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சம் தெரிவித்துள்ளது.
Similar News
News February 23, 2025
மெரினாவுக்கு போங்க: பீச்சு; மேட்சு ரெண்டும் பார்க்கலாம்!

இந்தியா – பாகிஸ்தான் மோதும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை சென்னை மக்கள் காண விசேஷ ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. போட்டி தொடங்குவதற்கு முன் மாலையில் மெரினாவுக்கு சென்றுவிட்டால் போதும், லைவ்வாக மேட்ச்சை கண்டுகளிக்கலாம். இதற்காக மெரினாவில் விவேகானந்தர் இல்லம் எதிரிலும், பெசன்ட் நகரில் போலீஸ் பூத் அருகிலும் பிரம்மாண்ட திரை அமைக்கப்பட்டுள்ளது. இன்று மெரினா செல்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
News February 23, 2025
‘டிராகன்’ நாயகியின் கல்யாண கண்டிஷன்கள்

‘டிராகன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ள கயாடு லோஹர் (24), தன்னை திருமணம் செய்து கொள்வதற்கான கண்டிஷன்களை பகிர்ந்துள்ளார். அதில், தன்னை மட்டுமே அதிகமாக நேசிக்கக் கூடியவராக இருக்க வேண்டும் எனவும், அவருடைய அன்பு கொஞ்சம் கூட மற்றவருக்கு போகக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், நேர்மையானவராக, தனக்காக கதவு திறந்துவிடுவது போன்ற சின்ன சின்ன சேவகங்களை செய்ய வேண்டும் எனவும் கண்டிஷன் போட்டுள்ளார்.
News February 23, 2025
வரலாற்று சாதனை படைப்பாரா கோலி?

பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் கிங் கோலி வரலாற்று சாதனை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 14,000 ரன்களை தொடர கோலிக்கு இன்னும் 15 ரன்களே தேவை. அதனை அவர் எடுத்தால், சச்சின், சங்ககாராவுக்கு அடுத்தபடியாக அந்த மைல்கல்லை எட்டிய 3 ஆவது வீரர் என்ற பெருமையை பெறுவார். இதனால், இன்றைய ஆட்டத்தை கோலி ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.