News August 8, 2024
ஆம்ஸ்ட்ராங் கொலையில் புதுத் தகவல்

ஆம்ஸ்ட்ராங் கொலையில் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டதில் புதுத் தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தலில் எம்பி சீட் கேட்டு காங்கிரஸில் அஸ்வத்தாமன் முயற்சித்த நிலையில், அவரை ரூ.10 கோடி கேட்டு தொழிலதிபரை மிரட்டியதாக போலீசார் கைது செய்தனர். இதனால் வாய்ப்பு பறிபோனது. இதற்கு ஆம்ஸ்ட்ராங்தான் காரணம் என கருதி ரவுடிகளுடன் சேர்ந்து கொலைக்கு திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
Similar News
News December 10, 2025
TN-ல் அடுத்த 100 நாள்களில் தேர்தல்: CV சண்முகம்

அதிமுகவை அழிக்க சில அரசியல் புரோக்கர்கள் முயற்சி செய்வதாக EX அமைச்சர் CV சண்முகம் விமர்சித்துள்ளார். பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் அடுத்த 100 நாள்களில் தேர்தல் நடைபெறவுள்ளதாக தெரிவித்தார். மேலும், உறவாடி கெடுப்பவர்களிடம் அதிமுகவினர் உஷாராக இருக்க வேண்டும் எனவும் கூறினார். மேலும், நேரடி எதிரிகள், மறைமுக துரோகிகளுக்கு வரும் தேர்தலில் நிச்சயம் பாடம் புகட்டப்படும் என சூளுரைத்தார்.
News December 10, 2025
புதுச்சேரியில் பொங்கல் பரிசுத்தொகுப்பு அறிவிப்பு

புதுச்சேரியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2026-ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத்தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ₹750 மதிப்பில் 4 கிலோ பச்சரிசி, நாட்டுச்சர்க்கரை, பாசிப்பருப்பு, 300 கிராம் நெய், 1 லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவை அடங்கிய தொகுப்பு வரும் 3-ம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது. தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசுத்தொகுப்பை CM ஸ்டாலின் விரைவில் அறிவிக்க உள்ளார்.
News December 10, 2025
ஷூட்டிங்கே போகல.. அதுக்குள்ள ₹80 கோடி லாபம்!

‘ஆவேஷம்’ ஜித்து மாதவன் இயக்கத்தில் ‘சூர்யா 47’ ஷூட்டிங்கே இன்னும் தொடங்காத நிலையில், தயாரிப்பாளர் சூர்யாவுக்கு கிட்டத்தட்ட ₹80 கோடி வரை லாபம் கிடைத்து விட்டதாம். படத்தின் வெளிநாட்டு உரிமம், ஆடியோ, டிஜிட்டல் ரைட்ஸ் ஆகியவை விற்கப்பட்டு, இந்த ஜாக்பாட் சூர்யாவுக்கு அடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், சூர்யா – ஜித்து மாதவன் காம்போ மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளதையும் இது காட்டுகிறது.


