News August 8, 2024
ஆம்ஸ்ட்ராங் கொலையில் புதுத் தகவல்

ஆம்ஸ்ட்ராங் கொலையில் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டதில் புதுத் தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தலில் எம்பி சீட் கேட்டு காங்கிரஸில் அஸ்வத்தாமன் முயற்சித்த நிலையில், அவரை ரூ.10 கோடி கேட்டு தொழிலதிபரை மிரட்டியதாக போலீசார் கைது செய்தனர். இதனால் வாய்ப்பு பறிபோனது. இதற்கு ஆம்ஸ்ட்ராங்தான் காரணம் என கருதி ரவுடிகளுடன் சேர்ந்து கொலைக்கு திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
Similar News
News November 16, 2025
TN SIR: 26,000 குடும்பங்களுக்கு பெரிய சிக்கல்

தமிழகத்தில் SIR காரணமாக சென்னை, பெரும்பாக்கம் காலனியில் 26,000 குடும்பங்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வீடு இல்லாதவர்கள், இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்கள், தமிழக அரசு மறுவாழ்வு திட்டத்தின் கீழ் இங்கு குடியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த மக்களுக்கு முறையான முகவரியும், அதற்கான ஆவணங்களும் இல்லை. இதனால், அவர்களின் வாக்குரிமை உறுதி செய்வதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
News November 16, 2025
போதைப்பொருள் விவகாரத்தில் அடிபடும் ‘காஞ்சனா 4’ நாயகி

மும்பை போலீஸ் சமீபத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடித்தது. அதில் ‘காஞ்சனா 4’ நாயகி நோரா பதேகி பெயர் அடிப்பட்டது. ஆனால், இதில் தனக்கு சம்மந்தம் இல்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார். நான் பார்ட்டிக்கு போவதில்லை, வேலை செய்யவே நேரம் சரியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், நியூஸ்களின் வியூவ்ஸ்களுக்காக தனது பெயரை பயன்படுத்தினால், விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.
News November 16, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: சுற்றந்தழால் ▶குறள் எண்: 521 ▶குறள்: பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள. ▶பொருள்: ஒருவருக்கு வறுமை வந்த நேரத்திலும் அவரிடம் பழைய உறவைப் பாராட்டும் பண்பு உடையவர்களே சுற்றத்தார் ஆவார்கள்.


