News August 8, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலையில் புதுத் தகவல்

image

ஆம்ஸ்ட்ராங் கொலையில் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டதில் புதுத் தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தலில் எம்பி சீட் கேட்டு காங்கிரஸில் அஸ்வத்தாமன் முயற்சித்த நிலையில், அவரை ரூ.10 கோடி கேட்டு தொழிலதிபரை மிரட்டியதாக போலீசார் கைது செய்தனர். இதனால் வாய்ப்பு பறிபோனது. இதற்கு ஆம்ஸ்ட்ராங்தான் காரணம் என கருதி ரவுடிகளுடன் சேர்ந்து கொலைக்கு திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

Similar News

News October 19, 2025

GST 2.0: ₹7 லட்சம் கோடியை தாண்டும் வருவாய்

image

GST 2.0 எதிரொலியாக பண்டிகை கால விற்பனை உச்சத்தை அடைந்துள்ளன. டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மிஷின் விற்பனை 40 – 45% உயர்ந்துள்ளதாக Haier, ரிலையன்ஸ், LG, கோத்ரேஜ் உள்ளிட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதேபோல், அமேசான் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்களிலும் விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த பண்டிகை காலத்தின் வருவாய் ₹7 லட்சம் கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News October 19, 2025

சிக்மண்ட் பிராய்ட் பொன்மொழிகள்

image

*நாம் ஒருவரையொருவர் தற்செயலாகத் தேர்ந்தெடுப்பதில்லை. நம் ஆழ் மனதில் ஏற்கனவே இருப்பவர்களை மட்டுமே நாம் சந்திக்கிறோம். *வரலாறு என்பது வெறுமனே புதிய மக்கள் பழைய தவறுகளைச் செய்வதுதான். *உங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளில் இருந்து உங்கள் பலம் வெளிவரும். *தனக்குத்தானே முற்றிலும் நேர்மையாக இருப்பது ஒரு நல்ல பழக்கமாகும். *ஒருவரிடம் அவர் விரும்பியது இல்லாதபோது, தன்னிடம் இருப்பதை அவர் விரும்ப வேண்டும்.

News October 19, 2025

கேப்டன்ஷிப்பை பறிகொடுப்பது பயமாக உள்ளது: SKY

image

டி20 கேப்டனாக கில் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியான நிலையில், அது குறித்து சூர்யகுமார் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். கேப்டன்ஷிப்பை பறிகொடுப்பது என்பது அனைவருக்குமே பயத்தை கொடுக்கு எனவும், ஆனால் அந்த பயம் தான், சிறப்பாக விளையாட தூண்டும் உந்துசக்தியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், நேர்மையும், கடின உழைப்பும் இருந்தால் நடக்க வேண்டியது நடக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!