News August 8, 2024
ஆம்ஸ்ட்ராங் கொலையில் புதுத் தகவல்

ஆம்ஸ்ட்ராங் கொலையில் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டதில் புதுத் தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தலில் எம்பி சீட் கேட்டு காங்கிரஸில் அஸ்வத்தாமன் முயற்சித்த நிலையில், அவரை ரூ.10 கோடி கேட்டு தொழிலதிபரை மிரட்டியதாக போலீசார் கைது செய்தனர். இதனால் வாய்ப்பு பறிபோனது. இதற்கு ஆம்ஸ்ட்ராங்தான் காரணம் என கருதி ரவுடிகளுடன் சேர்ந்து கொலைக்கு திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
Similar News
News November 5, 2025
சொந்தக் காலில் இந்தியா தனித்து நிற்கிறது: FM

பொருளாதார பலம் காரணமாக இந்தியா தனித்து சொந்தக்காலில் உயர்ந்து நிற்பதாக FM நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் சரியான பாதையில் இல்லை என்று சொல்பவர்களை நம்பி அடிபணியக்கூடாது என அவர் கூறியுள்ளார். உலகின் மிகப்பெரிய 3-வது பொருளாதார நாடாக இந்தியா மாறும் என்றும், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்திலும் நம் நாடு வேகமாக முன்னேறும் காலத்தில் இருப்பதாகவும் அவர் பேசியுள்ளார்.
News November 5, 2025
நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும்: விஷ்ணு விஷால்

தமிழ் சினிமா ஹீரோக்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர்கள் நஷ்டமடைவதற்கு ஹீரோக்களின் சம்பளமும் ஒரு காரணம் என்றும், அதை குறைத்தால் படத்தின் மேக்கிங்கிற்கு கூடுதல் செலவு செய்யலாம் எனவும் அவர் கூறினார். தனது கடைசி 3 படங்கள் லாபம் ஈட்டியதாகவும் குறிப்பிட்டார். பல டாப் ஹீரோக்கள் படத்தின் பட்ஜெட்டில் 50-60% சம்பளமாக பெறுகின்றனர் என்பது கோலிவுட் வட்டார தகவல்.
News November 5, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 510 ▶குறள்: தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும். ▶பொருள்: ஒருவனை ஆராயாமல் பதவியில் அமர்த்துவதும், அமர்த்தியபின் அவன்மீதே சந்தேகம் கொள்வதும் நீங்காத துன்பத்தைத் தரும்.


